பருத்தி கையிருப்பை விற்கக் கூடாது - மத்திய ஜவுளித்துறை அமைச்சருக்கு கோவை தென்னிந்திய ஸ்பின்னிங் அசோசியேஷன் கடிதம்

ஜூலை 1ஆம் தேதி முதல் எம்எஸ்எம்இ ஸ்பின்னிங் மில்ஸ் நிறுவனத்திற்கு மூன்று மாதங்களுக்கு விற்பனையாகாத பருத்தி இருப்புகளை பராமரித்து நூற்பாலை ஆலைகளுக்கு வழங்க மத்திய ஜவுளித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய ஜவுளித்துறை அமைச்சருக்கு தென்னிந்திய ஸ்பின்னிங் அசோசியேஷன் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.


கோவை: கோவை தென்னிந்திய ஸ்பின்னிங் அசோசியேசன் செயலாளர் ஜெகதீஸ் சந்திரன், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங்கிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நிதி நெருக்கடியில் எண்ணற்ற ஸ்பின்னிங் மில்கள் மூடப்பட்டு உள்ளதாகவும், சமீபகாலமாக ஆடை ஏற்றுமதி ஆர்டர்கள் அதிகரிப்பால் பல ஆலைகள் மீண்டும் துவங்கி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் உற்பத்தி தேவைகளை பூர்த்தி செய்ய பருத்திக்கான தேவை அதிகரித்து வருவதாகவும், இந்த நிலையில் 24 லட்சம் பேல் பருத்தி விலை வணிகர்களுக்கு விற்பனை செய்வதாக தகவல் வெளியானதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனை சிசிஐ., தவிர்க்க வேண்டும் எனவும், வியாபாரிகளுக்கு விற்பனை செய்வதை நிறுத்திவிட்டு நூற்பாலைகளுக்கு விற்பனைக்கு தக்கவைத்துக் கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ள சிஸ்பா, நான்கு மாதங்களுக்கு முன் பருத்தியின் விலை திடீரென ஒரு கேண்டிக்கு 58 ஆயிரம் ரூபாயிலிருந்து 63 ஆயிரம் ரூபாயாக உயர்ந்தது எனவும், அப்போது வியாபாரிகளுக்கு பருத்தி விற்பனை செய்ய வேண்டாம் என மத்திய ஜவுளி அமைச்சகம் மற்றும் சிசிஐ., யிடம் கோரிக்கை விடுத்ததாகவும், தங்களின் கோரிக்கை அடிப்படையில் ஜவுளி அமைச்சகம் பருத்தியை வணிகர்களுக்கு விற்க வேண்டாம் என்று சிசிஐ அறிவுறுத்தியதாகவும், சிசிஐ பருத்தி வியாபாரிகளுக்கு விற்பனை செய்வதை நிறுத்தியதாகவும் சுட்டிக்காட்டி உள்ளது.

இதனால் பருத்தி விலை உடனடியாக குறைந்து ஒரு கேண்டிக்கு ஒரு ரூ.57,000 க்கு கடந்த நான்கு மாதங்களாக நிலையாக இருந்ததாகவும், சிசிஐ., விலைகள் ஒரு அளவுகோலாக செயல்பட்டதால் வெளிச்சந்தையில் பருத்தியின் விலையும் நிலையானதாக இருந்தது எனவும் சிசிஐ., வணிகர்களுக்கு விற்பனையை மீண்டும் தொடங்கினால் விலை மீண்டும் உயரும். ஆகவே ஜூலை 1ஆம் தேதி முதல் எம் எஸ்எம்இ ஸ்பின்னிங் மில்ஸ் நிறுவனத்திற்கு மூன்று மாதங்களுக்கு விற்பனையாகாத பருத்தி இருப்புகளை பராமரித்து நூற்பாலை ஆலைகளுக்கு வழங்க மத்திய ஜவுளித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் தென்னிந்திய ஸ்பின்னிங் அசோசியேஷன் வலியுறுத்தியுள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...

கோவை மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 90% முடிவு; விடுபட்ட வீடுகளுக்கு ICCC உதவி எண்கள் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 முதற்கட்ட வீட்டுக் கணக்கெடுப்பு பணிகள் 90% நிறைவு. விடுபட்ட வீட...

அமராவதி அணை நீர்மட்டம் 57.52 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணை 33.79 அடியாக பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் 57.52 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 33.79...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது....

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...