சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதாக சட்டமன்றத்தில் முதல்வர் அறிவிப்பு - கோவையில் விவசாயிகள் சங்க தலைவர் வரவேற்பு

சாதி வேறுபாடின்றி, பொருளாதாரம், கல்வி, மருத்துவம், முன்னேற்றம், ஒருமைப்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய வகையில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று சட்டமன்றத்தில் முதல்வர் அறிவிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.


கோவை: கோவையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் சு.பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், நீண்ட காலமாக சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டு வந்த நிலையில், இந்த கோரிக்கை ஒரு தீர்வு காண்கின்ற வகையில் தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவிப்பை வரவேற்பதாக கூறினார்.

இதை வைத்துக்கொண்டு அரசியல் ரீதியாக அல்லது மக்களிடத்தில் பிரிவினையை, ஏற்படுத்தக்கூடிய சில நபர்களும் இருப்பதாக கூறிய அவர், சட்டமன்றத்தில் முதல்வர் அறிவித்துள்ளதால், இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்த சாதி வாரி கணக்கெடுப்பு, ஏற்ற தாழ்வு இல்லாமல், சாதி வேறுபாடின்றி, பொருளாதாரம், கல்வி, மருத்துவம், முன்னேற்றம், ஒருமைப்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய வகையில் அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இந்த கணக்கெடுப்பிற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கூறிய அவர், இந்த முயற்சிக்கு தமிழ்நாடு விவசாய சங்கம் முழுமையான வரவேற்பை வழங்குவதாக தெரிவித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...