இலவச வீட்டு மனை பட்டா கேட்டு உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

கோட்டமங்கலம், பொன்னேரி, குடிமங்கலம், பெரியபட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று நான்காவது நாளாக ஜமாபந்தி நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில் கோட்டமங்கலம், பொன்னேரி, குடிமங்கலம், பெரியபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.



இதுபற்றி கூறிய கிராம மக்கள், கடந்த சில வருடங்களாகவே இலவச வீட்டு மனை இல்லாமல் வாடகை வீட்டில் குடியிருந்து வருகின்றோம். இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தால் இன்று நடைபெறும் ஜமாபந்தியில் வருவாய் கோட்டாட்சியர் கண்ணனிடம் மனு வழங்கியுள்ளோம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து வீடு இல்லாதமக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் குடிமங்கலம், கோட்டமங்கலம், பொன்னேரி, வரதராஜபுரம் கிராம மக்கள் இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி முற்றுகையிட்டதால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 57.52 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணை 33.79 அடியாக பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் 57.52 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 33.79...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது....

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...