இலவச வீட்டு மனை பட்டா கேட்டு உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

கோட்டமங்கலம், பொன்னேரி, குடிமங்கலம், பெரியபட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று நான்காவது நாளாக ஜமாபந்தி நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில் கோட்டமங்கலம், பொன்னேரி, குடிமங்கலம், பெரியபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.



இதுபற்றி கூறிய கிராம மக்கள், கடந்த சில வருடங்களாகவே இலவச வீட்டு மனை இல்லாமல் வாடகை வீட்டில் குடியிருந்து வருகின்றோம். இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தால் இன்று நடைபெறும் ஜமாபந்தியில் வருவாய் கோட்டாட்சியர் கண்ணனிடம் மனு வழங்கியுள்ளோம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து வீடு இல்லாதமக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் குடிமங்கலம், கோட்டமங்கலம், பொன்னேரி, வரதராஜபுரம் கிராம மக்கள் இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி முற்றுகையிட்டதால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா - 130 மாணவர்களுக்கு பட்டங்கள்

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...