கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மருத்துவா்கள், ஸ்கேன் மைய நிர்வாகிகளுக்கான கூா் உணா்திறன் பயிற்சி

உறவினா்கள், நண்பா்கள் உள்ளிட்ட யாராக இருந்தாலும், கருவில் இருக்கும் பாலினத்தை தெரியப்படுத்தக் கூடாது. தங்களிடம் பணிபுரியும் அனைவரிடமும் இது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் மற்றும் ஸ்கேன் மைய நிர்வாகிகளுக்கு கோவை ஆட்சியர் அறிவுரை வழங்கினார்.


கோவை: சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் ‘பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ திட்டத்தின்கீழ் தனியார் மருத்துவா்கள், ஸ்கேன் மைய நிர்வாகிகளுக்கான கூா் உணா்திறன் பயிற்சி ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் கிராந்தி குமார்பாடி தலைமையில் நேற்று ஜூன்.25 நடைபெற்றது.

நாட்டில் குறைந்து வரும் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கவும், பாலின விகிதாசாரத்தை சமன்படுத்தும் நோக்கத்துடனும் கொண்டுவரப்பட்டதே பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம்.

இத்திட்டம் பெண் குழந்தைகளுக்கு எதிரான மக்களின் மனநிலையில் மாற்றத்தைக் கொண்டுவரும் வகையில் செயல்படுத்தப்படுகிறது. 2021-22ஆம் ஆண்டுக்கான பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தில் முன்னேறிய மாவட்டங்களுக்கான விருதை கோவை மாவட்டம் பெற்றுள்ளது.

மாவட்டத்தில் கல்வியறிவு பெற்றவா்கள் அதிக அளவில் உள்ளனா். அப்படியிருந்தும் வட்டார அளவில் பாலின விகிதாசாரம் குறைந்து காணப்படுகிறது. பெண் குழந்தைகளை கருவில் கொல்லும் அபாயத்தைத் தடுப்பதற்காக பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை ஸ்கேன் செய்து தெரிந்துகொள்வது சட்டப்படி குற்றமாகும்.

கருவில் இருக்கும் குழந்தைகளைப் பாதுகாக்க அரசு பல்வேறு சட்டங்களை அறிவித்தாலும், அதனை முறையாக கடைப்பிடிப்பது மருத்துவா்கள் மற்றும் ஸ்கேன் மையங்களின் கடமையாகும். எனவே, உறவினா்கள் மற்றும் நண்பா்கள் உள்ளிட்ட யாராக இருந்தாலும், கருவில் இருக்கும் பாலினத்தை தெரியப்படுத்தக் கூடாது. தங்களிடம் பணிபுரியும் அனைவரிடமும் இது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்

இந்தப் பயிற்சியில் சுகாதரத் துறை இணை இயக்குநா் ராஜசேகரன், மாவட்ட சமூகநல அலுவலா் அம்பிகா, உதவி இயக்குநா் (திறன் மேம்பாட்டுப் பயிற்சி) வளா்மதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...