ஒண்டிப்புதூரில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க ஒப்புதல் - கோவை மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் நன்றி

ஒண்டிப்புதூரில் 20.72 ஏக்கர் நிலத்தில், "சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் அமைக்கும் முடிவிற்கு ஒப்புதல் வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கோவை மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் தனது முகநூல் பக்கத்தில் வீடியோ பதிவிட்டுள்ளார்.



கோவை: தமிழ்நாடு முதலமைச்சர், திமுக கழகத் தலைவர் ஆணைக்கிணங்க, கழக இளைஞரணிச் செயலாளர், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க, கோவை மாநகர் மாவட்டம், சிங்காநல்லூர் தொகுதி, ஒண்டிப்புதூரில் 20.72 ஏக்கர்நிலத்தில், "சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் அமைக்கும் முடிவிற்கு ஒப்புதல் வழங்கியமைக்கும், கோவையில் அறிவியல் மேதை அதிசய விஞ்ஞானி ஜி.டி.நாயுடு அவர்களுக்கு 50 இலட்சம் ரூபாயில் திருவுருவச் சிலை அமைக்கப்படும் என தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழ்நாடு அரசு அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சருக்கும், இளைஞர்களின் இதய ஏந்தல், இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரம், கழக இளைஞரணிச் செயலாளர், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருக்கும் நன்றி என்று கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பிலும், கோவை மாவட்ட பொதுமக்கள், இளைஞர்கள், இளம்பெண்கள், கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள், கிரிக்கெட் விளையாட்டு ரசிகர்கள் சார்பில் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கோவை மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் தனது முகநூல் பக்கத்தில் இன்று வீடியோ ஒன்றை ஜூன்.25 பதிவிட்டுள்ளார்.

Newsletter

கோவை துப்பாக்கி சூடு வீரர்கள் 168 பதக்கங்கள் வென்று சாதனை

சென்னையில் நடைபெற்ற 51வது மாநில அளவிலான ரைபிள், பிஸ்டல் துப்பாக்கி சூடு போட்டியில் கோவை வீரர்கள் 168 பதக்கங்களை வென்றனர்...

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளருக்கு கத்திக்குத்து; தொழிலாளி கைது

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளரை கத்தியால் தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். படுக...

கோவை மாநகராட்சி ஆணையர் மத்திய மண்டல தூய்மைப் பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மத்திய மண்டலத்தின் வார்டு 48ல் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்து, தூய்மைப் பணியாளர்களுக...

ஒண்டிப்புதூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரி மக்கள் போராட்டம்; கிழக்கு மண்டல அலுவலகம் முற்றுகை

கோவை ஒண்டிப்புதூர் சூர்யா நகர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் சிங்காநல்லூர் கிழக்கு...

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...