சி.பி.ஐ. விசாரணை கோரி கவர்னர் ஆர்.என்.ரவியிடம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மனு

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த பரிந்துரை செய்யவேண்டும் என கவர்னர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து தமிழக பாஜக தலைவர் அண்ணமலை மனு அளித்துள்ளார்.


கோவை: கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த 20ந்தேதி கள்ளச்சாராயம் குடித்த விவகாரத்தில் இதுவரை 58 பேர் உயிரிழந்து உள்ளனர். இன்னும் பலர் மருத்துவமனைகளில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் உயிர்ப்பலி இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவம் தமிழகம் மட்டும் இன்றி இந்திய அளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த், தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளனர்.

ஆனால், முதல்வர் ஸ்டாலின் இதுவரை கள்ளக்குறிச்சிக்கு செல்லவில்லை. கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். மேலும் தாய், தந்தையை இழந்த குழந்தைகளின் பெயரில் தலா ரூ.5 லட்சம் டெபாசிட் செய்யப்படும். அவர்களது கல்வி செலவை அரசே ஏற்கும் என்றும் அறிவித்தார்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தக்கோரி உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கடிதம் எழுதி இருப்பதாக தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை ஏற்கனவே கூறி இருந்தார்.

இந்நிலையில் அண்ணாமலை இன்று ஜூன்.24 தமிழக கவர்னர் ஆர்.என். ரவியை அவரது மாளிகையில் சந்தித்தார். அப்போது அவருடன் முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உள்பட பாஜக மூத்த தலைவர்கள் முன்னணி பிரமுகர்களும் சென்று இருந்தனர்.

இந்த சந்திப்பின்போது அண்ணாமலை ஆளுனர் ரவியிடம் கொடுத்த கோரிக்கை மனுவில் கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்துவதற்கு பரிந்துரை செய்யவேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

மேலும் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததற்கு மாநில மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டது.

மதுவிலக்கு அமைச்சரை பதவி நீக்கம் செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துமாறு ஆளுநரிடம் கோரிக்கை வைத்தோம் என்று அண்ணாமலை சமூக ஊடக தளமான எக்ஸ்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...