சி.பி.ஐ. விசாரணை கோரி கவர்னர் ஆர்.என்.ரவியிடம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மனு

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த பரிந்துரை செய்யவேண்டும் என கவர்னர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து தமிழக பாஜக தலைவர் அண்ணமலை மனு அளித்துள்ளார்.


கோவை: கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த 20ந்தேதி கள்ளச்சாராயம் குடித்த விவகாரத்தில் இதுவரை 58 பேர் உயிரிழந்து உள்ளனர். இன்னும் பலர் மருத்துவமனைகளில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் உயிர்ப்பலி இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவம் தமிழகம் மட்டும் இன்றி இந்திய அளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த், தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளனர்.

ஆனால், முதல்வர் ஸ்டாலின் இதுவரை கள்ளக்குறிச்சிக்கு செல்லவில்லை. கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். மேலும் தாய், தந்தையை இழந்த குழந்தைகளின் பெயரில் தலா ரூ.5 லட்சம் டெபாசிட் செய்யப்படும். அவர்களது கல்வி செலவை அரசே ஏற்கும் என்றும் அறிவித்தார்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தக்கோரி உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கடிதம் எழுதி இருப்பதாக தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை ஏற்கனவே கூறி இருந்தார்.

இந்நிலையில் அண்ணாமலை இன்று ஜூன்.24 தமிழக கவர்னர் ஆர்.என். ரவியை அவரது மாளிகையில் சந்தித்தார். அப்போது அவருடன் முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உள்பட பாஜக மூத்த தலைவர்கள் முன்னணி பிரமுகர்களும் சென்று இருந்தனர்.

இந்த சந்திப்பின்போது அண்ணாமலை ஆளுனர் ரவியிடம் கொடுத்த கோரிக்கை மனுவில் கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்துவதற்கு பரிந்துரை செய்யவேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

மேலும் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததற்கு மாநில மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டது.

மதுவிலக்கு அமைச்சரை பதவி நீக்கம் செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துமாறு ஆளுநரிடம் கோரிக்கை வைத்தோம் என்று அண்ணாமலை சமூக ஊடக தளமான எக்ஸ்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Newsletter

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தல்..? 50 மூட்டைகளுடன் சிக்கிய மினி லாரி.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்ட...

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...