கிட்டாம்பாளையத்தில் பட்டா நிலம் ஆக்கிரமிட்பு - பஞ்சாயத்து தலைவர் மீது கோவை ஆட்சியரிடம் மக்கள் புகார்

கிட்டாம்பாளையம் பகுதியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மக்களுக்கு அரசு வழங்கியுள்ள பட்டா நிலத்தை பஞ்சாயத்து தலைவர் ஆக்கிரமிட்பு செய்துள்ளதாக அப்பகுதி மக்கள் கோவை ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.


கோவை: கோவை கருமத்தம்பட்டி கிட்டாம்பாளையம் பகுதியில் வசித்து வரும் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மக்களுக்கு அரசு வீட்டுமனை பட்டா வழங்கியுள்ளது.

இந்த நிலையில் அந்த பட்டா நிலத்தை கிட்டாம்பாளையம் பஞ்சாயத்து தலைவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், அந்த நிலத்தை மீட்டு தர வலியுறுத்தியும் அப்பகுதி மக்கள் கோவை மாவட்ட ஆட்சியர் தலைவரிடம் இன்று ஜூன்.24 மனு அளித்தனர்.

இது குறித்து ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் முதல் முதலமைச்சர் வரை மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர்கள், நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் முதல்வரை நேரில் சந்திக்க செல்ல உள்ளதாக கூறினர்.

மேலும் 2019ஆம் ஆண்டிலிருந்து சுமார் 350க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வீட்டுமனை பட்டா கேட்டு தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் மனுக்களை அளித்து வருவதாகவும், அதற்கு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவித்தனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...