உடுமலையில் நகர பாஜக சார்பில் யோகா தின விழா கொண்டாட்டம்

நகரத் தலைவர் கண்ணாயிரம் தலைமையில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில் தியானப் பயிற்சி, மூச்சுப் பயிற்சி, சர்வங்காசனம் உள்ளிட்ட பல்வேறு யோகாசனங்கள் செய்து காண்பிக்கப்பட்டன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட ஐஸ்வர்யா நகரில் உள்ள பாஜக அலுவலகம் எதிரில் ஐ.எம்.ஹாலில் இன்று சர்வதேச யோகா தின விழா திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் மங்களம் ரவி அறிவுறுத்தல் படி நகரத் தலைவர் கண்ணாயிரம் தலைமையில் நடைபெற்றது.



யோகா தின நிகழ்ச்சியில் தியானப் பயிற்சி, மூச்சுப் பயிற்சி, சர்வங்காசனம் உள்ளிட்ட பல்வேறு யோகாசனங்கள் செய்து காண்பிக்கப்பட்டன. நகர பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சீனிவாசன், நகர துணைத் தலைவர் உமா குப்புசாமி, மாவட்ட பிரச்சார அணி தலைவர் சின்ராஜ், மாவட்ட ஊடகப்பிரிவு செயலாளர் சம்பத், உடுமலை நகர செயலாளர் ஜோதிடர் முருகேசன், நகர துணைத் தலைவர் நாச்சியப்பன், மாவட்ட மத்திய நலத்திட்ட பிரிவு செயலாளர் நடராஜ், மாவட்ட மகளிர் அணி செயலாளர் வித்யா, ஊடகப்பிரிவு நகரத் தலைவர் கண்ணன், தரவு தர மேலாண்மை கோபிநாத், ஆரியபவன் ரவி, தங்கவேல், பழனிச்சாமி, ஆறுமுகம், பாலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 57.52 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணை 33.79 அடியாக பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் 57.52 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 33.79...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது....

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...