கோவையில் 20 இடங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள் அமைக்கும் பணி துவக்கம்

கோவை வ.உ.சி. பூங்கா பகுதியில் முதல் சார்ஜிங் நிலையம் அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. இந்த சார்ஜிங் நிலையங்களில் டாடா நிறுவனத்தின் EZ சார்ஜ் எனும் சார்ஜிங் கட்டமைப்பு அமைக்கப்படும். இதனால் 1 மணி நேரத்தில் ஒரு மின்சார காருக்கு தேவைப்படும் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும்.


கோவை: கடந்த நிதியாண்டு வரை இந்தியாவில் 38.50 லட்சம் மின்சார வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளன. இதில் 95% வாகனங்கள் 2 சக்கர மின்சார வாகனங்கள், 1.67 லட்சம் வாகனங்கள் 4 சக்கர மின்சார வாகனங்கள் மற்றும் 7,700 வாகனங்கள் மின்சார பேருந்துகள், இந்தியாவில் விற்கப்படும் சுமார் 40% நான்கு சக்கர மின்சார வாகனங்களும், சுமார் 70% 2 சக்கர மின்சார வாகனங்களும் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டவை.

நாடு முழுவதும் மின்சார வாகனங்களின் விற்பனை மற்றும் பயன்பாடு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது என்பதில் மாற்று கருத்து இல்லை. கோவை மாநகரில் 20 இடங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள் அமைத்திட கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் டாடா பவர் கம்பெனி லிட், மும்பை (TATA POWER FAST CHARGING STATION) புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டன.

இந்த ஒப்பந்தத்தின் கீழ் தற்போது கோவை வ.உ.சி. பூங்கா பகுதியில் முதல் சார்ஜிங் நிலையம் அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. இந்த சார்ஜிங் நிலையங்களில் டாடா நிறுவனத்தின் EZ சார்ஜ் எனும் சார்ஜிங் கட்டமைப்பு அமைக்கப்படும். இதனால் 1 மணி நேரத்தில் ஒரு மின்சார காருக்கு தேவைப்படும் 80% சார்ஜ் வரை செய்ய முடியும்.

இதையும் சேர்த்து மொத்தம் அமையவுள்ள 20 சார்ஜிங் நிலையங்களில் 3 ஆர்.எஸ்.புரம் பகுதியில் அமைகிறது. அவிநாசி சாலை, வ.உ.சி. பூங்கா பகுதி, வாலாங்குளம் மற்றும் காளப்பட்டி ஆகிய பகுதிகளில் தலா 2 சார்ஜிங் நிலையங்களும், சரவணம்பட்டி, புரூக்பீல்டு அருகே அமைந்துள்ள மாநகராட்சி பார்க்கிங் பகுதி, சிங்காநல்லூர், டைட்டில் பார்க், காந்திபுரம் கிராஸ்கட் சாலை, பெரியகுளம், துடியலூர் ஆகிய பகுதிகளில் தலா 1 சார்ஜிங் நிலையமும் அமைகிறது.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...