அருந்ததி ராய் மீதான உபா வழக்கை ரத்து செய்யக்கோரி உக்கடத்தில் இடதுசாரி ஜனநாயக முற்போக்கு அமைப்புகளின் சார்பில் ஆா்ப்பாட்டம்

எழுத்தாளா் அருந்ததி ராய், பேராசிரியா் சௌகத் உசேன் ஆகியோர் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதைக் கண்டித்து, உக்கடத்தில் அனைத்து இடதுசாரி ஜனநாயக முற்போக்கு அமைப்புகளின் சார்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: எழுத்தாளா் அருந்ததி ராய், பேராசிரியா் சௌகத் உசேன் ஆகியோர் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதைக் கண்டித்து, அனைத்து இடதுசாரி ஜனநாயக முற்போக்கு அமைப்புகளின் சார்பில் உக்கடத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) மாவட்டச் செயலா் க.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார்.

மத்திய கமிட்டி உறுப்பினா் பாலசுந்தரம், மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் சேகா் அண்ணாதுரை, புரட்சிகர இளைஞா் கழகத்தின் பெரோஸ்பாபு, அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தின் பிலோமினா, ஆதித்தமிழா் பேரவையின் ரவிக்குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினா்.

இதில், வழக்குரைஞா்கள் மலரவன், லூயிஸ் கே.தாமஸ், சுயமரியாதை திராவிடா் கழகத்தின் நேருதாஸ், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் நிர்வாகி வெங்கடாசலம் உள்ளிட்டோர் பங்கேற்றனா்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...