அருந்ததி ராய் மீதான உபா வழக்கை ரத்து செய்யக்கோரி உக்கடத்தில் இடதுசாரி ஜனநாயக முற்போக்கு அமைப்புகளின் சார்பில் ஆா்ப்பாட்டம்

எழுத்தாளா் அருந்ததி ராய், பேராசிரியா் சௌகத் உசேன் ஆகியோர் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதைக் கண்டித்து, உக்கடத்தில் அனைத்து இடதுசாரி ஜனநாயக முற்போக்கு அமைப்புகளின் சார்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: எழுத்தாளா் அருந்ததி ராய், பேராசிரியா் சௌகத் உசேன் ஆகியோர் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதைக் கண்டித்து, அனைத்து இடதுசாரி ஜனநாயக முற்போக்கு அமைப்புகளின் சார்பில் உக்கடத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) மாவட்டச் செயலா் க.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார்.

மத்திய கமிட்டி உறுப்பினா் பாலசுந்தரம், மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் சேகா் அண்ணாதுரை, புரட்சிகர இளைஞா் கழகத்தின் பெரோஸ்பாபு, அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தின் பிலோமினா, ஆதித்தமிழா் பேரவையின் ரவிக்குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினா்.

இதில், வழக்குரைஞா்கள் மலரவன், லூயிஸ் கே.தாமஸ், சுயமரியாதை திராவிடா் கழகத்தின் நேருதாஸ், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் நிர்வாகி வெங்கடாசலம் உள்ளிட்டோர் பங்கேற்றனா்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...