காவல் நிலையம் அருகிலேயே கள்ளச்சாராயம் விற்பனை - கள்ளக்குறிச்சியில் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

காவல் நிலையத்திற்கு பின்புறமே கள்ளச்சாராயம் விற்கபடுகிறது என்றால் இந்த நிர்வாகம் எப்படி செயல்படுகிறது என்று நீங்கள் நினைத்து பார்க்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


கோவை: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்ததால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை நேரில் சந்தித்து எடப்பாடி பழனிசாமி ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, இந்த அரசே செயல்படாமல் உள்ளது. பொதுக்குழு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலினே சொல்கிறார். நான் இரவில் தூங்கி காலையில் எழுந்ததும் என் கட்சி நிர்வாகிகளால் எந்த பிரச்சினை ஏற்படுமோ என்று அவரே சொல்லியிருக்கிறார். கட்சி அவரது கட்டுப்பாட்டிலேயே இல்லை. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 36 பேர் உயிரிழந்து இருப்பது மன வேதனை அளிக்கிறது. மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது.

இவர்கள் அனைவரும் ஏழைகள். பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவராக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இந்த கள்ளச்சாராயம் விற்கப்பட்ட பகுதி கள்ளக்குறிச்சி நகரின் மையப்பகுதி. இந்த கள்ளச்சாராயம் விற்பனை நடந்த இடத்திற்கு அருகே தான் காவல் நிலையம் உள்ளது. அதன் அருகே தான் நீதிமன்றம் இருக்கிறது. அதோடு மாவட்ட காவல் கண்காளிப்பாளர் இங்கே இருக்கிறார். மாவட்ட ஆட்சியர் இருக்கிறார். இப்படி இந்த பகுதியில், இவ்வளவு அதிகாரிகள் இருக்கின்ற மாவட்ட தலைநகரத்தில் காவல் நிலையத்திற்கு பின்புறமே கள்ளச்சாராயம் விற்கபடுகிறது என்றால் இந்த நிர்வாகம் எப்படி செயல்படுகிறது என்று நீங்கள் நினைத்து பார்க்க வேண்டும்.

எங்களுக்கு கிடைத்த தகவல் படி, இதற்கு பின்னாலே மிகப்பெரிய கும்பல் இருப்பது தெரியவந்துள்ளது. அதுவும் ஆளுங்கட்சியை சேர்ந்த அதிகாரமிக்கவர்களே இந்த கள்ளச்சாராய சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்பது தெரிகிறது. இல்லாவிட்டால் இவ்வளவு துணிச்சலாக, நகரத்தின் மையப்பகுதியில் காவல்நிலையத்தின் பின்புறமே கள்ளச்சாராயம் விற்பனை நடைபெறுமா?.. இது மக்களிடையே மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று இரவில் இருந்து ஒவ்வொருவராக உயிரிழந்து வருவது ரொம்ப அதிர்ச்சியை அளிக்கிறது. இதேபோல் போதைபொருள் விவகாரத்திலும் தொடர்ந்து திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தி வந்தேன். ஆனால் அதற்கும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. முன்பும் இதேபோல் ஒரு சம்பவம் நடந்தது. அப்போதே இதற்கு தகுந்த நடவடிக்கை எடுத்து இருந்தால் இப்போது இப்படி நிகழ்ந்திருக்காது. இப்போது 36 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வளவு பேர் உயிரிழந்ததற்கு காரணமாக இருந்த நிர்வாக திறமையற்ற முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என்பது தான் பொருத்தமாக இருக்கும். ஏனென்றால் ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி, ஏழைய எளிய மக்களின் விலை மதிக்க முடியாத உயிரிழப்பிற்கு தார்மீக பொறுப்பேற்று திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Newsletter

திருமணமானதை மறைத்து கர்ப்பமாக்கிய பெண்ணுக்கு மிரட்டல்: காவலர் கைது

கோவை அருகே திருமணமானதை மறைத்து இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கியதுடன், கட்டாய கருக்கலைப்பு மற்றும் கொலை மிரட்டல் விடுத்...

கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று இரவு முதல் போக்குவரத்து கட்டுப்பாடு

கேபிள் பதிக்கும் பணி காரணமாக கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று (மே 14) இரவு முதல் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதி...

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...