சவுரிபாளையம் பகுதியில் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்- கைது

கோவை மாவட்டம் சவுரிபாளையம்  அருகே உள்ள தேர்வீதி பகுதியில் 1653 எண் கொண்ட டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடை குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ளதால் பெண்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். 

மேலும், கோவை மாநகரத்தில் நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளையும் அகற்றியதால் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள மதுக்கடைக்கு ஏராளமானோர் குவிந்து வருகின்றனர்.

எனவே. மேற்குறிப்பிட்ட டாஸ்மாக் கடையினை அகற்ற வேண்டும் எனக்கோரி இன்று அப்பகுதி பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் டாஸ்மாக் கடையினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இருப்பினும் தங்களது கோரிக்கை நிறைவேறும்வரை போராட்டம் தொடரும் என அவர்கள் அறிவித்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்கள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

முன்னதாக, தேர்வீதி பகுதி மக்களின் டாஸ்மாக் கடை எண் 1653 முற்றுகை போராட்டத்தால் 12 மணிக்கு திறக்கப்படவேண்டிய கடை தற்போது வரை திறக்கப்படாமல் உள்ளது.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...