வெடிப்பொருட்களை போலீசார் அழித்தப்போது பாலமநல்லூரில் வீடுகளில் விரிசல் - கிராம மக்கள் போராட்டம்

நீதிமன்ற உத்தரவுப்படி பறிமுதல் செய்யப்பட்ட வெடிப்பொருட்களை கல்குவாரில் வைத்து வெடிகுண்டு செயலிழப்பு படை போலீசார் வெடித்து அழித்தனர். அப்போது பாலமநல்லூரில் வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: பொள்ளாச்சி அடுத்துள்ள கோட்டூர் மற்றும் ஆனைமலை பகுதிகளில் உள்ள தோட்டங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. பறிமுதல் செய்த வெடிபொருட்களை நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று பொள்ளாச்சி அருகே உள்ள பாலமநல்லூர் கிராமத்தில் உள்ள தனியார் கல்குவாரியில் கோவை மாவட்ட வெடிகுண்டு செயலிழப்பு படை போலீசார் வெடிப்பொருட்களை வெடித்து அழித்தனர்.



அப்போது எதிர்பாராத விதமாக பயங்கர சத்தத்துடன் வெடி பொருள்கள் வெடித்ததில் கல் குவாரி அலுவலகத்தில் உள்ள கதவு ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சேதம் அடைந்தன.



அதேபோல் அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாலமநல்லூர் கிராமத்தில் உள்ள வீடுகளில் அதிர்வு ஏற்பட்டு சுவர்கள், மேற்கூரைகள் சேதமடைந்தன.



இதனால் தனியார் கல்குவாரியை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் ஆனைமலை காவல் நிலைய ஆய்வாளர் குமாரிடம் சராமரியாக கேள்வி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



அப்போது ஆய்வாளர் குமார் பேசிய போது, ரோட்ல போறப்ப ஆக்சிடென்ட் ஆன தூக்கிலயா போட்டுருவாங்க தெரியாம நடந்து போச்சு மன்னிப்பு கேட்கிறோம். எந்தெந்த வீடு பாதிப்பாய் இருக்குனு சொல்லுங்க என் சொத்த வித்தாவது பணம் தரேன். நானும் பொதுமக்கள் தானே கம்பெனி காரன் தப்பு பண்ணி இருந்தா பரவாயில்லை. கேஸ்ல பிடிச்ச பொருட்களை தான் நீதிமன்றத்தோட அனுமதியோட வெடிக்க வச்சோம். எதார்த்தமா நடந்து போச்சு எத்தனை கோடி எத்தனை லட்சம் ஆனாலும் பாதிச்ச வீடுகளுக்கு இழப்பீடு தர்றேன். நாங்க என்ன ஆந்திரா போலீசா உங்க ஊர் போலீஸ் தானே என சமாளித்தார். இதை கேட்ட பொதுமக்கள் புலம்பிக்கொண்டு அங்கிருந்து சென்றனர்.

Newsletter

ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு

கோவையில் ஆழியார் அணை 55.55 அடி, பரம்பிக்குளம் அணை 21.84 அடி, சோலையாறு அணை 75.19 அடி நீர்மட்டத்தை எட்டியுள்ளன. தென்மேற்கு...

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...