வெடிப்பொருட்களை போலீசார் அழித்தப்போது பாலமநல்லூரில் வீடுகளில் விரிசல் - கிராம மக்கள் போராட்டம்

நீதிமன்ற உத்தரவுப்படி பறிமுதல் செய்யப்பட்ட வெடிப்பொருட்களை கல்குவாரில் வைத்து வெடிகுண்டு செயலிழப்பு படை போலீசார் வெடித்து அழித்தனர். அப்போது பாலமநல்லூரில் வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: பொள்ளாச்சி அடுத்துள்ள கோட்டூர் மற்றும் ஆனைமலை பகுதிகளில் உள்ள தோட்டங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. பறிமுதல் செய்த வெடிபொருட்களை நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று பொள்ளாச்சி அருகே உள்ள பாலமநல்லூர் கிராமத்தில் உள்ள தனியார் கல்குவாரியில் கோவை மாவட்ட வெடிகுண்டு செயலிழப்பு படை போலீசார் வெடிப்பொருட்களை வெடித்து அழித்தனர்.



அப்போது எதிர்பாராத விதமாக பயங்கர சத்தத்துடன் வெடி பொருள்கள் வெடித்ததில் கல் குவாரி அலுவலகத்தில் உள்ள கதவு ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சேதம் அடைந்தன.



அதேபோல் அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாலமநல்லூர் கிராமத்தில் உள்ள வீடுகளில் அதிர்வு ஏற்பட்டு சுவர்கள், மேற்கூரைகள் சேதமடைந்தன.



இதனால் தனியார் கல்குவாரியை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் ஆனைமலை காவல் நிலைய ஆய்வாளர் குமாரிடம் சராமரியாக கேள்வி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



அப்போது ஆய்வாளர் குமார் பேசிய போது, ரோட்ல போறப்ப ஆக்சிடென்ட் ஆன தூக்கிலயா போட்டுருவாங்க தெரியாம நடந்து போச்சு மன்னிப்பு கேட்கிறோம். எந்தெந்த வீடு பாதிப்பாய் இருக்குனு சொல்லுங்க என் சொத்த வித்தாவது பணம் தரேன். நானும் பொதுமக்கள் தானே கம்பெனி காரன் தப்பு பண்ணி இருந்தா பரவாயில்லை. கேஸ்ல பிடிச்ச பொருட்களை தான் நீதிமன்றத்தோட அனுமதியோட வெடிக்க வச்சோம். எதார்த்தமா நடந்து போச்சு எத்தனை கோடி எத்தனை லட்சம் ஆனாலும் பாதிச்ச வீடுகளுக்கு இழப்பீடு தர்றேன். நாங்க என்ன ஆந்திரா போலீசா உங்க ஊர் போலீஸ் தானே என சமாளித்தார். இதை கேட்ட பொதுமக்கள் புலம்பிக்கொண்டு அங்கிருந்து சென்றனர்.

Newsletter

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...