வெடிப்பொருட்களை போலீசார் அழித்தப்போது பாலமநல்லூரில் வீடுகளில் விரிசல் - கிராம மக்கள் போராட்டம்

நீதிமன்ற உத்தரவுப்படி பறிமுதல் செய்யப்பட்ட வெடிப்பொருட்களை கல்குவாரில் வைத்து வெடிகுண்டு செயலிழப்பு படை போலீசார் வெடித்து அழித்தனர். அப்போது பாலமநல்லூரில் வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: பொள்ளாச்சி அடுத்துள்ள கோட்டூர் மற்றும் ஆனைமலை பகுதிகளில் உள்ள தோட்டங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. பறிமுதல் செய்த வெடிபொருட்களை நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று பொள்ளாச்சி அருகே உள்ள பாலமநல்லூர் கிராமத்தில் உள்ள தனியார் கல்குவாரியில் கோவை மாவட்ட வெடிகுண்டு செயலிழப்பு படை போலீசார் வெடிப்பொருட்களை வெடித்து அழித்தனர்.



அப்போது எதிர்பாராத விதமாக பயங்கர சத்தத்துடன் வெடி பொருள்கள் வெடித்ததில் கல் குவாரி அலுவலகத்தில் உள்ள கதவு ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சேதம் அடைந்தன.



அதேபோல் அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாலமநல்லூர் கிராமத்தில் உள்ள வீடுகளில் அதிர்வு ஏற்பட்டு சுவர்கள், மேற்கூரைகள் சேதமடைந்தன.



இதனால் தனியார் கல்குவாரியை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் ஆனைமலை காவல் நிலைய ஆய்வாளர் குமாரிடம் சராமரியாக கேள்வி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



அப்போது ஆய்வாளர் குமார் பேசிய போது, ரோட்ல போறப்ப ஆக்சிடென்ட் ஆன தூக்கிலயா போட்டுருவாங்க தெரியாம நடந்து போச்சு மன்னிப்பு கேட்கிறோம். எந்தெந்த வீடு பாதிப்பாய் இருக்குனு சொல்லுங்க என் சொத்த வித்தாவது பணம் தரேன். நானும் பொதுமக்கள் தானே கம்பெனி காரன் தப்பு பண்ணி இருந்தா பரவாயில்லை. கேஸ்ல பிடிச்ச பொருட்களை தான் நீதிமன்றத்தோட அனுமதியோட வெடிக்க வச்சோம். எதார்த்தமா நடந்து போச்சு எத்தனை கோடி எத்தனை லட்சம் ஆனாலும் பாதிச்ச வீடுகளுக்கு இழப்பீடு தர்றேன். நாங்க என்ன ஆந்திரா போலீசா உங்க ஊர் போலீஸ் தானே என சமாளித்தார். இதை கேட்ட பொதுமக்கள் புலம்பிக்கொண்டு அங்கிருந்து சென்றனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...