ஈஷா நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் முற்போக்கு இயக்கத்தினர் புகார்

தாக்குதல் நடத்திய ஈஷா நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி முற்போக்கு அமைப்பினர் இன்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணனிடம் புகார் மனு அளித்தனர்.


கோவை: கோவை மாவட்டம் முட்டத்துவயல் பகுதியில் பழங்குடி மக்களுக்கு சொந்தமான நிலத்தில் ஈஷா அறக்கட்டளை சார்பில் மின் தகன மேடை ஒன்று அமைக்கப்பட்டது. ஆனால் முறையாக மக்களிடம் கருத்து கேட்காமலும், விதிமுறைகளை மீறி மின் தகன மேடை அமைக்கப்பட்டுள்ளதாக அப்பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

மேலும் அங்கு விதிமீறல் உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் மின் தகன மேடை அமைப்பதில் முறைகேடு உள்ளதா என்பது குறித்து கண்டறிய தபெதிக, தமிழ்புலிகள் அமைப்பு உள்ளிட்ட முற்போக்கு அமைப்பினர் உண்மை கண்டறியும் குழு ஒன்றை அமைத்து கடந்த வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொள்ள சென்றனர்.

அப்போது அவர்களை ஈஷா அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் முற்போக்கு அமைப்பினர்கள் சென்ற வேன் கண்ணாடியை உடைத்ததோடு, தாக்குதல் நடத்தினர். இது குறித்து முற்போக்கு அமைப்பினர் ஆலாந்துறை போலீசில் புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில் முற்போக்கு அமைப்புகள் மீது தாக்குதல் நடத்திய ஈஷா நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி முற்போக்கு அமைப்பினர் இன்று ஜூன்.18 கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணனிடம் புகார் மனு அளித்தனர்.

Newsletter

கோவை கண்ணப்பநகரில் அண்ணாமலை தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியின் கண்ணப்பநகர் பகுதியில் தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் K.Annamalai, அதிமுக கோவை வடக்...

பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், தீவிர பிரச்சாரத்தால் ஏற்பட்ட காலில் வலி மற்று...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

தொண்டாமுத்தூர்: திமுக வேட்பாளர் என்.ஆர். கார்த்திகேயன் வெற்றிக்காக கட்சியினர் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் – செந்தில் பாலாஜி

தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டத்தில், கூட்டணிக் கட்சிகளின் நிர்வ...

வால்பாறை: திமுக வேட்பாளருக்கு ஆதரவு கோரி டாக்டர் மகேந்திரன் பரப்புரை..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் குட்டி என்கிற ஆ. சுதாகருக்கு ஆதரவு கோரி, பொள்ளாச்சி மற்றும் வால்பாறை தேர்தல்...