உயிரிழப்பில் சந்தேகம் எனக்கூறிய மருத்துவர்களுக்கு எதிர்ப்பு - பல்லடம் அரசு மருத்துவமனை முற்றுகை

பனப்பாளையத்தில் விபத்தில் உயிரிழந்தவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி திருப்பூர் மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைக்க பல்லடம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே திருப்பூர் சாலை பனப்பாளையம் பகுதியில், தொட்டிபாளையம் சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த ரவி என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்றிருந்த போது கீழே விழுந்து காயங்களுடன் உயிரிழந்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து அவரது உயிரிழப்பு சந்தேகத்தின் அடிப்படையில் இருப்பதாக பல்லடம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்து திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முயற்சித்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த உறவினர்கள், பல்லடம் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர். தொடர்ந்து மறியலில் ஈடுபட போவதாக அவர்கள் தெரிவித்தனர்.



இதனால் மருத்துவமனை தலைமை மருத்துவரிடம் பேச்சுவார்த்தை நடத்திய பல்லடம் காவல் ஆய்வாளர் லெனின் அப்பாதுரை, விசாரணையின் அடிப்படையில் வழக்குகள் மாறும், ஆகவே விசாரணை உரிய முறையில் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்து, அரசு மருத்துவமனையிலேயே பிரேத பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்தார். அதனை தொடர்ந்து போராட்டத்திற்கு வந்தவர்கள் கலைந்து சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நியமனம்

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்துள்ளது. அதன்படி கோவை மாவட்டத...

"தலைவா ஆணையிடு": அண்ணாமலைக்கு ஆதரவாக கோவையில் ரஜினி ரசிகர் மன்ற போஸ்டர்கள்

பாஜகவிலிருந்து அண்ணாமலை விலகிய நிலையில், கோவையில் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் என்று குறிப்பிட்டு "தலைவா ஆணையிடு! அ...

நிலம் வாங்குவது போல நடித்து ரியல் எஸ்டேட் நபரிடம் 6 பவுன் தங்க செயின் பறிப்பு; மூவர் கைது

கோவை மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் சிவக்குமாரிடம் வீடு காட்டுவதாக கூறி பொன்னூத்து அம்மன் கோவில் பகுதிக்...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா, IAS பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, IAS, இன்று மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 30-வது...

பள்ளிகள் திறப்பு: மாணவர் பாதுகாப்புக்கு கோவை காவல்துறை வழிகாட்டுதல்

கோவை மாவட்ட காவல்துறை பள்ளிகள் திறப்பையொட்டி மாணவர் பாதுகாப்பு குறித்த முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. சாலை வித...

சிங்காநல்லூர் தொகுதியில் 'தாயுமானவர்' திட்டம்: முதியவர்களுக்கு வீடு வீடாக ரேஷன் விநியோகம் மற்றும் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் 'தாயுமானவர்' திட்டத்தின் கீழ் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு வீடாக ரே...