காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள ஆழ்துளைக் குழிகள் மூடல் – கோவை மாநகராட்சி நடவடிக்கை

ஆழ்துளை குழிகள் மூடாமல் திறந்து கிடப்பது ஆபத்து என்று நேற்று சிம்ப்ளிசிட்டி தெரிவித்திருந்தநிலையில், காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள ஆழ்துளைக் குழிகளை மூடி இன்று கோவை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுருபிரபாகரனின் அறிவுறுத்தலின்படி, கோயம்புத்தூர் காந்திபுரம் 100- அடி சாலையின் இரு புறங்களிலும் அமைந்துள்ள வணிக நிறுவனங்களின் முன்புறத்தில் இரு புறங்களிலும் அமைந்துள்ள பாதாள சாக்கடையானது தூர்வாரப்பட்டு பாதள சாக்கடை குழிகள் தற்போது உரிய முறையில் மூடப்பட்டுள்ளன.



ஆழ்துளை குழிகள் மூடாமல் திறந்து கிடப்பது பற்றி நேற்று மாலையில் சிம்ப்ளிசிட்டி தெரிவித்தது. எச்சரித்த சிறிது நேரத்தில் ஒரு பெண் அதில் தவறி விழுந்தார். பொதுமக்களின் அதிருப்தியை அடுத்து, காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள ஆழ்துளைக் குழிகளை மூடி கோவை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...