மதுக்கரை தாலுகாவில் மக்களின் குறைகளை கேட்க கோவை ஆட்சியர் கிராந்தி குமார் பாடி நேரில் செல்கிறார்

கோவை மாவட்டம், மதுக்கரை தாலுகாவில் மக்களின் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்யும் நோக்கில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி 19 ஜூன் 2024 அன்று மற்றும் அன்று மாலை நகராட்சி அலுவலகத்தில் கோரிக்கை மனுக்களை பெறுகிறார்.


கோவை: கோவை மாவட்டம், மதுக்கரை தாலுகாவில் உள்ள மக்களின் குறைகளை நேரடியாக கேட்டு நிவர்த்தி செய்ய, வரும் ஜூன் 19 ஆம் தேதி கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அங்கு நேரில் அதிகாரிகளுடன் செல்கிறார்.

முதல் கட்டமாக 19 ஆம் தேதி காலை 11 மணி முதல் 12 மணி வரை வெவ்வேறு அரசு துறை சார்ந்த அதிகாரிகள் பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெறுவார்கள்.இதே போல மதுக்கரை நகராட்சி அலுவலகத்தில் ஆட்சியர் மாலை 4.30 மணி முதல் மாலை 6 மணி வரை பொது மக்களின் கோரிக்கை மனுக்களை பெறவுள்ளார். 

இதனால் மதுக்கரை தாலுகாவில் உள்ள 20 கிராமங்கள் பயனடைய உள்ளது. உங்களை தேடி உங்கள் ஊரில் எனும் அரசு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ஒரு மாவட்டத்தில் உள்ள ஏதாவது ஒரு தாலுகாவில் ஆட்சியர் தங்கி மக்களின் குறைகளை கேட்கவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. மதுக்கரையில் 19.6.2024 காலை 9 மணி முதல் மறுநாள் காலை 9 மணி வரை ஆட்சியர் அங்கு தங்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...

கோவை மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 90% முடிவு; விடுபட்ட வீடுகளுக்கு ICCC உதவி எண்கள் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 முதற்கட்ட வீட்டுக் கணக்கெடுப்பு பணிகள் 90% நிறைவு. விடுபட்ட வீட...

அமராவதி அணை நீர்மட்டம் 57.52 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணை 33.79 அடியாக பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் 57.52 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 33.79...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது....