கோவையில் முப்பெரும் விழா: இந்திய அரசியலமைப்பு புத்தகத்திற்கு முன்பு தலைகுனிந்து வணங்க வைத்தது நம் வெற்றி: முதல்வர் ஸ்டாலின்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவையில் நடைபெற்ற விழாவில், எட்டு முறை தமிழ்நாட்டிற்கு வந்து பிரதமர் கட்டமைத்த பிம்பத்தை, அருமைச் சகோதரர் ராகுல் காந்தி ஒரே ஒரு ஸ்வீட் பாக்ஸ் கொடுத்து ‘Close’ செய்துவிட்டார்.


Coimbatore: இன்று (15-06-2024) கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் கழகத் தலைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.

கடந்த முறை இங்கே நான் கலந்துகொண்ட கூட்டம் இந்தியா முழுவதும் ‘டிரெண்ட்’ ஆனது. அதற்குக் காரணம், எட்டு முறை தமிழ்நாட்டிற்கு வந்து பிரதமர் கட்டமைத்த பிம்பத்தை, அருமைச் சகோதரர் ராகுல் காந்தி ஒரே ஒரு ஸ்வீட் பாக்ஸ் கொடுத்து ‘Close’ செய்துவிட்டார்! சகோதரர் ராகுலின் அந்த அன்பை என்னால் என்றைக்கும் மறக்க முடியாது! அன்றைக்கு அவர் வழங்கிய இனிப்பு நம்முடைய எதிர்க்கட்சியினரின் கணிப்புகளைப் பொய்யாக்கியது.

மக்களிடம் நம்பிக்கை வைக்காமல் தேர்தலில் வெற்றி பெற முடியாது. நம் ஆட்சியின் மேல் நம்பிக்கை வைத்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி. வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை நாம் பெற்றுள்ளோம். இனி வர இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் 200-க்கும் அதிகமான தொகுதிகளை நம்முடைய கூட்டணி கைப்பற்றும் என்று நம்பிக்கையுடன் கூறுகிறேன்.







இந்த நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையின்போது, இன்னும் 24 அமாவாசைதான் இருக்கிறது என்று உளறிக்கொண்டு இருந்த மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அவர்களுக்குச் சிதம்பரம் கூட்டத்தில் ஒன்றைச் சொன்னேன். “சட்டமன்றத் தேர்தல் வரட்டும். அ.தி.மு.க.-விடம் இருக்கும் தொகுதிகளையும் சேர்த்தே தி.மு.க. பறிக்கும். இது உறுதி. இதை ஆணவத்தில் சொல்லவில்லை. தமிழ்நாட்டு மக்களுக்கு நாங்கள் செய்த, செய்ய இருக்கிற நன்மைகள் மேல் நம்பிக்கை வைத்துச் சொல்கிறேன்” என்று சிதம்பரத்தில் பேசினேன்.

அதுமட்டுமல்ல, 2024-இல் நாம்பெருமையாக பெற்ற வெற்றி, நம்முடைய திராவிட மாடல் அரசு மேல் மக்களுக்கு இருக்கிற திருப்தியால் கிடைத்தது. நாம்பெருமையாக சொல்வதற்கு, இந்த வெற்றி தமிழக மக்களின் வெற்றி!

நான் இங்கே நின்று உரையாற்றுகின்றேன், இது எங்களின் சாதாரண வெற்றி அல்ல. சமூகநீதிக்காக, இந்திய அரசியலமைப்பின் மதிப்புகளை காப்பாற்றுவதற்காக எங்களுடைய போராட்டம் வெற்றியடைந்துள்ளது. 2004-ஆம் ஆண்டு நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் 40-க்கும் 40 வெற்றி பெற்று, அப்போது அ.தி.மு.க. அரசு இருந்த நிலையிலும் நம்மை வெற்றி அடையச் செய்தார். அதேபோல, இப்போது நாங்கள் பெற்றுள்ள இந்த வெற்றி, நம் ஆட்சியின் மேல் மக்களுக்கு இருக்கிற நம்பிக்கையால் கிடைத்த வெற்றி.

தொடர்ந்து, திமுக கூட்டணியின் வெற்றியை உறுதிசெய்யும் வகையில், 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 200-க்கும் அதிகமான தொகுதிகளை கைப்பற்றுவோம் என்ற இலக்கை நோக்கி நமது பயணத்தை இன்றிலிருந்து தொடங்குவோம்.

Newsletter

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொள்ளாச்சி வேட்பாளருக்கு கட்சிப் பெயரே பயன்படுத்த முடியாத நிலை - அண்ணாமலை விமர்சனம்

பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமனை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தி...

பொள்ளாச்சியில் கூட்டணி வேட்பாளர் நித்யானந்தன் பொதுமக்களுடன் கலந்துரையாடல்

பொள்ளாச்சி வாணியர் சேவா சங்க வளாகத்தில் கூட்டணி வேட்பாளர் நித்யானந்தன் பொதுமக்களுடன் சிறப்பு கலந்துரையாடல் நடத்தினார். ப...

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...