கோவையில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ஆர்ப்பாட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜூன் 13 அன்று ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவு கோரி தமிழக அரசை கண்டித்தனர்.


கோவை: மாநிலத் தழுவிய மாவட்ட அளவிலான தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம் இன்று ஜூன்.13 நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் தமிழக அரசை கண்டித்தும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டமானது இன்று ஜூன்.13 நடைபெற்றது.

அதன்படி தமிழ்நாட்டில் உள்ள ஆசிரியர்களுக்கு கடந்த ஆட்சியில் மருத்துவ காப்பீடு திட்டம் வழங்கப்பட்டது. அப்போது 80% முதல் 90% வரை மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலமாக ஆசிரியர்கள் பயனடைந்தனர். ஆனால் திமுக ஆட்சி அமைத்த பிறகு அதனை குறைத்து 30% முதல் 40% வரை மட்டுமே பயனடையும் வகையில் மாற்றி உள்ளனர்.

மேலும் United India Insurance நிறுவனம் மூலமாக காப்பீட்டு வழங்கி வந்த நிலையில் தற்போது அதனை MD India மற்றும் Medi Assist என்ற நிறுவனம் மூலம் குறைந்த அளவில் திமுக அரசு வழங்கி வருவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் ஆசிரியர்களுக்கு கட்டணம் இல்லாத சிகிச்சை வழங்க வேண்டும் இல்லாவிட்டால் ஜூலை 17-ம் தேதி United India Insurance காப்பீட்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு தமிழக அரசை கண்டித்தும் மாபெரும் மாநிலம் அளவிலான போராட்டம் நடத்தப் போவதாக தெரிவித்தனர்.

Newsletter

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...

கோவையில் ரயில் மோதி 8 வயது பள்ளி மாணவர் உயிரிழப்பு

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் ரயில்வே தண்டவாளப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது பள்ளி மாணவர் பிரகதீஷ் மீது வெள்ளி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக தேனீ தினம் கொண்டாட்டம்

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 20ஆம் தேதி உலக தேனீ தினம் கொண்டாடப்படுகிறது. தேனீ வளர்ப்பு பயிற்சி...