கோவையில் 18 மாத கைக்குழந்தையுடன் மருத்துவர் பட்டம் பெற்ற மாணவிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாராட்டு

கோவையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், 18 மாத கை குழந்தையுடன், கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த ஷிபினா என்பவர் பட்டம் பெற்றார். அவருக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாராட்டு தெரிவித்தார்.


கோவை: கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்தவர் ஷிபினா. இவருக்கு கோவை இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்து, 2018-19 ஆம் ஆண்டு மருத்துவ படிப்பில் சேர்ந்தார். கல்வி முடியும் முன்பே, 2021 ஆம் ஆண்டு மருத்துவரான அப்து ராஃப் என்பவருடன் திருமணம் இவருக்கு திருமணம் நடைபெற்றது.



திருமணத்திற்கு பிறகும் மருத்துவப் படிப்பை தொடர்ந்த ஷிபினாவுக்கு திருமணம் முடிந்த ஒருவருடத்திற்கு பிறகு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையை கவனித்துக்கொண்டே, படிப்பை தொடர்ந்த ஷிபினா இன்று டாக்டர் ஷிபினா எம்.பி.பி.எஸ்ஸாக பட்டம் பெற்றார்.



கோவையில் நடந்த பட்டமளிப்பு விழாவில், தனது 18 மாத ஹலீமா என்ற பெண் கை குழந்தையுடன், வந்து பட்டம் பெற்றார். அவருக்கு தமிழ்நாடு மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாராட்டு தெரிவித்தார். பட்டம் பெற்ற ஷிபினாவுக்கு குடும்பத்தினர் மட்டுமின்றி அனைவரும் பாராட்டு தெரிவித்தனர்.

Newsletter

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...

பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் மது போதையில் தள்ளி இளைஞர் கொலை - குற்றவாளி கைது

பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியில் குடும்ப பூசல் காரணமாக மது போதையில் வந்த ஆனந்த் என்பவர் பாலகிருஷ்ணனை தள்...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு தோன்றி பரபரப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் அறையில் நேற்று எதிர்பாராதவிதமாக பாம்பு ஒன்று தோன்றியதால் பரபரப்...

மூளைச்சாவடைந்த இளைஞரின் உறுப்பு தானம் மூவருக்கு புதுவாழ்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள வெஞ்சமடை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் கருப்புசாமி மே 10ஆம் தேதி இருசக்...

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...