கோவை வெள்ளியங்கிரி மலை பகுதியில் 7 டன் கழிவுகள் அகற்றம் – வனத்துறை அதிகாரிகள் விளக்கம்

வெள்ளியங்கிரி மலைப் பகுதிகளில் ஏழு டன் குப்பைகள் அகற்றப்பட்டு உள்ளன. இவற்றில் பெரும்பாலானது பக்தர்களின் துணிகள் ஆகும். ஓடைப் பகுதிகளில் துணிகளை அப்புறப்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


கோவை: கோவை அருகே உள்ள வெள்ளியங்கிரி மலையில் வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசிப்பதற்காக பக்தர்கள் மலை ஏறுவது வழக்கம். 6.5 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த மலை ஏற்ற பாதையில் அரிய வகை தாவரங்கள் மற்றும் விலங்குகளின் நடமாட்டமும் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை பக்தர்கள் மலை ஏறலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில் இந்த ஆண்டு ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலை ஏறினர்.

இங்கு ஆறாவது மலையில் பழைய துணிகள் ஏராளமாக கிடக்கின்றன. சிவபெருமானை வழிபட ஏழாவது மலையின் உச்சிக்கு செல்லும் முன் ஆறாவது மலையில் உள்ள ஆண்டி சுனை என்ற ஓடையில் குளித்துவிட்டு தங்கள் பழைய ஆடைகளை வீசி செல்கின்றனர். இதனால் ஆறாவது மலை பகுதியில் ஏராளமான துணிகள் தேக்கம் அடைந்து பாதிப்பை ஏற்படுத்தி வந்தது.

தற்போது சீசன் முடிவடைந்ததை தொடர்ந்து மழை பாதைகளில் தூய்மை செய்யும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் தூய்மைப் பணிகள் மேற்கொள்ள முடியவில்லை. தற்பொழுது முழு அளவில் நடைபெற்று வருகிறது. முதல் மூன்று மலைகளிலும் கடைசி இரண்டு மலைகளான ஆறு மற்றும் ஏழாவது மலைகளிலும் கழிவுகள் அகற்றப்பட்டு உள்ளன.

நான்காவது மற்றும் ஐந்தாவது மலைகளில் சுத்தம் செய்யும் பணி இன்னும் மேற்கொள்ளப்படவில்லை. இது குறித்து வனத்துறை அதிகாரிகள் பேசும்போது, தற்பொழுது வரை வெள்ளியங்கிரி மலைப் பகுதிகளில் ஏழு டன் குப்பைகள் அகற்றப்பட்டு உள்ளன. இவற்றில் பெரும்பாலானது பக்தர்களின் துணிகள் ஆகும். ஓடைப் பகுதிகளில் துணிகளை அப்புறப்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மழை காரணமாக சில நாட்களாக மலைப் பகுதிகளில் தன்னார்வலர்களால் சுத்தம் செய்ய முடியவில்லை.

அவர்கள் கழிவுகளை சேகரித்து செங்குத்தான மற்றும் வழுக்கும் பகுதி வழியாக திரும்ப வேண்டியது இருப்பதால் கடினமான சூழ்நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கழிவுகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...