கோவையில் 5வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகளில் இலவச சேர்க்கை – ஆட்சியர் அறிவிப்பு

பெற்றோர்கள் தங்கள் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை அருகில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகளில் சேர்த்து இலவசமாக கல்வி பயின்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி நேற்று ஜூன்.11 வெளியிட்டுள்ள அறிக்கையில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் தொடக்கப்பள்ளிகள் 12, உயர்நிலைப்பள்ளி 1, மேல்நிலைப்பள்ளிகள் 2 என மொத்தம் 15 பள்ளிகளும், பழங்குடியினர் நலத்துறையின் கீழ் தொடக்கப் பள்ளிகள் 11, நடுநிலைப் பள்ளிகள் 2, உயர்நிலைப் பள்ளி 2, மேல்நிலைப் பள்ளிகள் 1 என மொத்தம் 16 பள்ளிகளும் உள்ளன.

தற்போது இப்பள்ளிகளில் நிகழாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அரசுப் பள்ளிகளில் 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்புவரை தமிழ்வழியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு அரசு பணியில் 20 சதவீத முன்னுரிமையும், 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வில் 7.5 சதவீத முன்னுரிமையும், பெண் கல்வி இடைநிற்றலை தடுக்கும் வகையில் அரசு பள்ளியில் பயின்று உயர் கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000/- உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.

இதுபோன்று கல்வி உதவித்தொகை, இலவசநோட்டு புத்தகம், புத்தகப்பை, மிதிவண்டி உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. எனவே, பெற்றோர்கள் தங்கள் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை அருகில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகளில் சேர்த்து இலவசமாக கல்வி பயின்று பயன்பெறலாம். என மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...