நீர் நிலைகளிலிருந்து வண்டல் மண்ணை இலவசமாக எடுத்துச் செல்ல விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் – கோவை ஆட்சியர் அறிவிப்பு

நீர் நிலைகளிலிருந்து வண்டல் மண்ணை இலவசமாக எடுத்துச் செல்ல விவசாயிகள் அளிக்கும் விண்ணப்பங்கள் உடனுக்குடன் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியின் அடிப்படையில் விவசாய நில மேம்பாட்டு பணிகளுக்காக மண்/வண்டல் மண் எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி நேற்று ஜூன்.11 வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நீர் நிலைகளில் படிந்துள்ள மண் வண்டல் மண்ணை விவசாய பணிகளுக்காக இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி வழங்குவது குறித்து கோயம்புத்தூர் மாவட்ட அரசிதழ் சிறப்பு வெளியீட்டு எண். 3, நாள்: 21.05.2024 மற்றும் எண்.5 நாள்: 31.05.2024 ஆகியவற்றின்படி பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது.

83 நீர் நிலைகளிலிருந்து விவசாய பயன்பாட்டிற்காக மண் 1 வண்டல் மண்ணை இலவசமாக எடுத்துச் செல்ல விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். இந்நேர்வில், விவசாயிகளின் நலன் கருதி மண்/வண்டல் மண் எடுத்துக் கொள்ள அனுமதி கோரும் விண்ணப்பங்களை உடனடியாக பெற்று பரிசீலனை செய்து ஆணை பிறப்பிக்க ஏதுவாகும் வகையில் சம்மந்தப்பட்ட வட்டாட்சியர்களிடம் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பம் செய்யலாம் என தெரிவிக்கப்படுகிறது.

அவ்வாறு வரப்பெறும் விண்ணப்பங்கள் உடனுக்குடன் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியின் அடிப்படையில் விவசாய நில மேம்பாட்டு பணிகளுக்காக மண்/வண்டல் மண் எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடிதெரிவித்துள்ளார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...