நீர் நிலைகளிலிருந்து வண்டல் மண்ணை இலவசமாக எடுத்துச் செல்ல விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் – கோவை ஆட்சியர் அறிவிப்பு

நீர் நிலைகளிலிருந்து வண்டல் மண்ணை இலவசமாக எடுத்துச் செல்ல விவசாயிகள் அளிக்கும் விண்ணப்பங்கள் உடனுக்குடன் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியின் அடிப்படையில் விவசாய நில மேம்பாட்டு பணிகளுக்காக மண்/வண்டல் மண் எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி நேற்று ஜூன்.11 வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நீர் நிலைகளில் படிந்துள்ள மண் வண்டல் மண்ணை விவசாய பணிகளுக்காக இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி வழங்குவது குறித்து கோயம்புத்தூர் மாவட்ட அரசிதழ் சிறப்பு வெளியீட்டு எண். 3, நாள்: 21.05.2024 மற்றும் எண்.5 நாள்: 31.05.2024 ஆகியவற்றின்படி பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது.

83 நீர் நிலைகளிலிருந்து விவசாய பயன்பாட்டிற்காக மண் 1 வண்டல் மண்ணை இலவசமாக எடுத்துச் செல்ல விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். இந்நேர்வில், விவசாயிகளின் நலன் கருதி மண்/வண்டல் மண் எடுத்துக் கொள்ள அனுமதி கோரும் விண்ணப்பங்களை உடனடியாக பெற்று பரிசீலனை செய்து ஆணை பிறப்பிக்க ஏதுவாகும் வகையில் சம்மந்தப்பட்ட வட்டாட்சியர்களிடம் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பம் செய்யலாம் என தெரிவிக்கப்படுகிறது.

அவ்வாறு வரப்பெறும் விண்ணப்பங்கள் உடனுக்குடன் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியின் அடிப்படையில் விவசாய நில மேம்பாட்டு பணிகளுக்காக மண்/வண்டல் மண் எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடிதெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை மாநகர BDDS குழுவினர் மாநில அளவிலான Anti-Sabotage Check போட்டியில் மீண்டும் தங்கப் பதக்கம்

சென்னை ஆவடி R.C.-யில் நடைபெறும் தமிழ்நாடு காவல்துறையின் Anti-Sabotage Check Competition 2026-ல் கோவை மாநகர BDDS குழுவைச்...

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...