உடுமலை பாஜக சார்பில் மோடியின் மூன்றாவது பதவியேற்பு விழா கொண்டாட்டம்

உடுமலையில் பாஜக சார்பில் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற கொண்டாட்டத்தில் பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கப்பட்டன.


திருப்பூர்: நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கடந்த 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானது. பரபரப்பான முடிவுகளுக்கு இடையே பாஜக கூட்டணி தனி பெரும்பான்மை பெற்று ஆட்சியை தக்க வைத்தது. அதைத் தொடர்ந்து நேற்று பதவியேற்பு விழா நடைபெற்றது. பிரதமராக 3-ம் முறையாக நரேந்திர மோடி பதவியேற்றார்.

அவரைத் தொடர்ந்து கேபினட் அமைச்சர்கள் இணை அமைச்சர்கள் என மொத்தம் 72 அமைச்சர்கள் பதவி ஏற்றனர். இந்த விழாவை பாஜக வினர் நாடு முழுவதும் கொண்டாடினார்கள். அந்த வகையில் உடுமலை நகர பாஜக சார்பில் மோடி பதவியேற்பு விழா கொண்டாடப்பட்டது.



விழாவிற்கு நகரத் தலைவர் கண்ணாயிரம் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் வடுகநாதன் முன்னிலை வகித்தார். அதைத் தொடர்ந்து மோடி 3-ம் முறையாக பதவி ஏற்பதற்கு உறுதுணையாக இருந்த கூட்டணி கட்சி மற்றும் பாஜகவினரை பாராட்டி நிர்வாகிகள் பேசினார்கள்.

மேலும் உடுமலை நகராட்சியில் 33 வார்டுகளில் சுமார் 7000 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்த நிலையில் வாக்களித்த வாக்காளர்களுக்கும் வெற்றிக்காக பாடுபட்ட பாஜக நிர்வாகிகளுக்கு நன்றிகள் பேய்க்கப்பட்டது.



இதையடுத்து பட்டாசு வெடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.



இந்த நிகழ்வில் பொதுச் செயலாளர்கள் சீனிவாசன், தம்பிதுரை, மாவட்ட செயலாளர் கலா, உடுமலை மகளிர் அணி ரதி, நகர துணைத் தலைவர்கள் உமா குப்புசாமி, கணேசன், ஹரி, சின்ராஜ், முருகேஷ், சிவசங்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...

கோவை மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 90% முடிவு; விடுபட்ட வீடுகளுக்கு ICCC உதவி எண்கள் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 முதற்கட்ட வீட்டுக் கணக்கெடுப்பு பணிகள் 90% நிறைவு. விடுபட்ட வீட...

அமராவதி அணை நீர்மட்டம் 57.52 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணை 33.79 அடியாக பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் 57.52 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 33.79...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது....

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...