கோவை கே ஜி மருத்துவமனை அருகே குடிநீர் குழாய் உடைப்பு; போக்குவரத்து மாற்றம்

கோவை கே ஜி மருத்துவமனை - நீதிமன்ற வளாகத்தை இணைக்கும் ரோட்டில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து மாற்றம் ஏற்பட்டது.



கோவை: கோவை நகரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் சாலைகள் தோண்டப்பட்டு பாதாள சாக்கடை, குடிநீர் குழாய், மின் இணைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.



இந்நிலையில் கே ஜி மருத்துவமனை நீதிமன்ற வளாகம் இரண்டும் இணைகின்ற ஆர்ட்ஸ் காலேஜ் ரோடு பகுதியில் திடீரென சாலையில் பள்ளம் ஏற்பட்டதால் குடிநீர் குழாய் உடைந்து சாலை எங்கும் தண்ணீர் தேங்கி நிற்கின்றன.



இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போக்குவரத்தை மாற்றி அமைத்து குழாயை சரி பண்ணும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



பாதாள சாக்கடை செல்லக்கூடிய குழாயில் அடைப்பு ஏற்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை கமிஷனர் அலுவலகம் முன்பு சீர் செய்யும் பணியில் மாநகராட்சி இறங்கினர் அந்த பாதாள சாக்கடை குழாய் சீர் செய்யும் பணியில் தற்போது அடைப்பு ஏற்பட்டு குடிநீர் செல்லக்கூடிய குழாயும் உடைந்துள்ளது.



மாநகராட்சி மாநகராட்சி அதிகாரிகள் தற்போது குடிநீர் குழாய் ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கு இன்னும் வராத காரணத்தினால் ரோட்டை சரிசெய்யும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...