நிறுவனத்திற்கு தடையில்லா சான்று வழங்க ரூ.20000 லஞ்சம் வாங்கிய கோவைப்புதூர் தீயணைப்பு நிலைய அலுவலர் கைது

சித்தாபுதூா் கருப்புசாமி லே-அவுட் பகுதியைச் சோ்ந்த கருப்புசாமி என்பவரிடம், நிறுவனத்துக்கு தடையில்லாச் சான்று வழங்க 20000 லஞ்சம் வாங்கிய கோவைப்புதூா் தீயணைப்பு நிலைய அலுவலர் சிவராஜை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.


கோவை: கோவை, சித்தாபுதூா் கருப்புசாமி லே-அவுட் பகுதியைச் சோ்ந்தவா் கருப்புசாமி. இவா் கோவை குறிச்சி சிட்கோவில் உள்ள தனது நிறுவனத்துக்கு தடையில்லாச் சான்று கோரி கோவைப்புதூா் தீயணைப்பு நிலையத்தில் விண்ணப்பித்துள்ளார்.

தடையில்லாச் சான்று வழங்குவதற்கு தீயணைப்பு நிலைய அலுவலா் சிவராஜ் ரூ.20,000 லஞ்சம் கேட்டதாகத் தெரிகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத கருப்புசாமி இது குறித்து கோவை லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, அவா்களின் ஆலோசனையின் பேரில் கருப்புசாமி ரூ.20,000 சிவராஜிடம் நேற்று ஜூன்.7 கொடுத்துள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினா் சிவராஜை கைது செய்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...

கோவை மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 90% முடிவு; விடுபட்ட வீடுகளுக்கு ICCC உதவி எண்கள் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 முதற்கட்ட வீட்டுக் கணக்கெடுப்பு பணிகள் 90% நிறைவு. விடுபட்ட வீட...

அமராவதி அணை நீர்மட்டம் 57.52 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணை 33.79 அடியாக பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் 57.52 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 33.79...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது....

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...