கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் நடைபெறும் 24 மணிநேர திட்டப்பணிகள் - ஆணையாளர் சிவகுருபிரபாகரன் ஆய்வு

வடக்கு மண்டலம் வார்டு எண்.20க்குட்பட்ட கணபதி, இராமகிருஷ்ணாபுரம், சத்தி சாலை பழைய எம்.எஸ்.ஆர் டேங்க் பகுதி மற்றும் கிழக்கு மண்டலம் வார்டு எண்.60க்குட்பட்ட வரதராஜபுரம் ஆகிய பகுதிகளில் சூயஸ் நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் 24 மணி நேர குடிநீர் திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் ஆய்வு செய்தார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி, வடக்கு மற்றும் கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் குடிநீர் திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இன்று (07.06.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர், கோயம்புத்தூர் மாநகராட்சி, வடக்கு மண்டலம் வார்டு எண்.20க்குட்பட்ட கணபதி, இராமகிருஷ்ணாபுரம், சத்தி சாலை பழைய எம்.எஸ்.ஆர் டேங்க் பகுதி மற்றும்



கிழக்கு மண்டலம் வார்டு எண்.60க்குட்பட்ட வரதராஜபுரம் ஆகிய பகுதிகளில் சூயஸ் நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் 24 மணி நேர குடிநீர் திட்டப்பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு, குடிநீரில் உள்ள குளோரின் அளவு குறித்தும் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்தும் தொடர்புடைய அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.



இந்த ஆய்வுகளின்போது, மாநகர தலைமைப் பொறியாளர் அன்பழகன், மாநகர நல அலுவலர் மரு.கே.பூபதி, உதவி ஆணையர்கள் ஸ்ரீதேவி, கவிதா, செயற்பொறியாளர்கள் கருப்பசாமி, முருகேசன், உதவி செயற்பொறியாளர்கள் ஹேமலதா, எழில், உதவி பொறியாளர்கள் இளங்கோவன், நாசர், ரவிக்கண்ணன், கல்யாணசுந்தரம், தலைமை நீர் பகுப்பாய்வுத்துறை சுகாதார ஆய்வாளர் சுரேஷ், சூயஸ் நிறுவன அலுவலர்கள் கோபாலகிருஷ்ணன், பட்நாயக் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...