பொள்ளாச்சி அருகே உள்ள அம்பராம்பாளையம் ஆற்றில் குளிக்க சென்ற சிறுவன் பலி - போலீசார் விசாரணை

அம்பராம்பாளையம் ஆற்றில் குளிக்கச் சென்று மாயமான உக்கடம் பகுதியைச் சேர்ந்த 14 வயதான மணிகண்டன் என்ற பள்ளிச் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டான். இது குறித்து ஆனைமலை காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: பொள்ளாச்சியை அடுத்த அம்பராம்பாளையம் ஆற்றில் பள்ளி விடுமுறை நாளில் கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த சிறுவர்கள் ஐந்து பேர் குளிக்க சென்றதாக கூறப்படுகிறது. அப்போது ஒரு சிறுவன் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. இது குறித்து தகவல் அறிந்த அக்கம்பக்கம் உள்ளவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், ஆற்றில் மாயமான சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.



இந்நிலையில் நீண்ட நேரப்போராட்டத்துக்கு பிறகு உக்கடம் பகுதியை சேர்ந்த 14 வயதான மணிகண்டன் என்ற சிறுவன் ஆற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது குறித்து ஆனைமலை காவல்நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...