வேளாண் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிப்பு

கடந்த மாதம் 7 ஆம் தேதி முதல் இணையவழியில் ஒருங்கிணைந்த மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு ஜூன் 6 ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஜூன்.12 வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.


Coimbatore: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் 14 இளம் அறிவியல் பட்டப் படிப்புகளில் உள்ள 5,361 இடங்களுக்கும், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் 6 இளம் அறிவியல் பட்டப் படிப்புகள், 3 தொழில் முறை பாடப் பிரிவுகளில் உள்ள 371 இடங்களுக்கும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் இளம் அறிவியல் (வேளாண்மை), இளம் அறிவியல் (தோட்டக்கலை) படிப்புகளில் உள்ள 340 இடங்களுக்குமான மாணவர் சேர்க்கையை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் நடத்துகிறது.

இதற்காக கடந்த மாதம் 7 ஆம் தேதி முதல் இணையவழியில் ஒருங்கிணைந்த மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு ஜூன் 6 ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஜூன்.12 வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த மூன்று கல்வி நிறுவனங்களிலும் சேருவதற்காக மொத்தம் 26,357 பேர் விண்ணப்பித்திருக்கின்றனர். இவர்களில் 16,289 பேர் மாணவிகள். 10,068 பேர் மாணவர்கள். அதேபோல பட்டயப் படிப்புக்கு 2,428 பேர் விண்ணப்பித்திருப்பதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Newsletter

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...

இன்ஸ்டாகிராம் காதலுக்கு எதிர்ப்பு?: பல்லடம் அருகே வீடு புகுந்து தாய் - மகள் வெட்டிக் கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பச்சாபாளையம் பகுதியில் வீடு புகுந்து தாய் மற்றும் மகளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இளநிலை மற்றும் முதுநில...

கோவையில் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம்: கொலை வழக்குப்பதிவு; 5 மாணவர்களிடம் தீவிர விசாரணை

கோவை ஒத்தக்கால்மண்டபம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் 5 மாணவர்களை காவல்த...

அமராவதி அணை நீர்மட்டம் 51.41 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 34.61 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 51.41 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...