கோவையில் வாக்கு எண்ணும் மையத்திற்கு தலைகாட்டாத அண்ணாமலை..!

பா.ஜ.க. மாநில தலைவரும், கோவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை ஒரு சுற்று வாக்கு எண்ணிக்கையில் கூட முன்னிலை வகிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




கோவை: நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், கோவையில் 24 சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ளது.

கோவையில் தடாகம் சாலையில் உள்ள அரசினர் பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்த மையத்தில் பல்வேறு கட்சி முகவர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் முகாமிட்டுள்ளனர்.

இவர்களோடு திமுக., அதிமுக.,வேட்பாளர்களான கணபதி ராஜ்குமார் மற்றும் சிங்கை ராமச்சந்திரன் ஆகியோர் இருந்தனர்.

ஆனால், காலையில் இருந்தே பா.ஜ.க. மாநில தலைவரும் கோவை தொகுதியின் வேட்பாளருமான அண்ணாமலை வரவில்லை. காலையில் இருந்து நடைபெற்ற ஒரு சுற்று வாக்கு எண்ணிக்கையில் கூட அண்ணாமலை முன்னிலை வகிக்கவில்லை. இதனால் அவர் கோவையில் இருந்துகொண்டே வாக்கு எண்ணும் மையத்தை எட்டிப்பார்க்கவில்லை என்று கட்சி தொண்டர்கள் தெரிவித்தனர். இது பா.ஜ.க. தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...