கோவை கோட்டைமேடு பகுதியில் திமுகவினர் மட்டன் பிரியாணி வழங்கி கொண்டாட்டம்

திமுக வேட்பாளர் ராஜ்குமார் 28,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருவதால் திமுகவினர் உற்சாகமடைந்துள்ளனர். பொதுமக்களுக்கு மட்டன் பிரியாணி, லட்டு வழங்கி அவர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.


கோவை: நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதிக்கும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் 38 தொகுதிகளில் திமுக., முன்னிலை வகித்து வருகிறது. இதனை ஒட்டி தமிழகம் முழுவதும் திமுகவினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.



கோவையில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை, அதிமுக வேட்பாளர் ராமச்சந்திரனை விட திமுக வேட்பாளர் ராஜ்குமார் 28,000 மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.

இந்த நிலையில் கோவையில் திமுக மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திக் தலைமையில் இன்று ஜூன்.4 திமுகவினர் காந்திபுரம் பேருந்து நிலையம் பகுதியில் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



கோட்டைமேடு பகுதியில் திமுகவினர் பொதுமக்களுக்கு மட்டன் பிரியாணி வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பிரியாணி வழங்கும் போது அருகில் ஆடுகளை நிறுத்தி வைத்திருந்தனர்.

கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் தலைமையில் திமுகவினர் பட்டாசு வெடித்து இன்று ஜூன்.4 கொண்டாடினர். பின்னர் பொதுமக்களுக்கும் பேருந்து நிலையத்தில் பஸ்ஸில் உள்ளவர்களுக்கும் லட்டு கொடுத்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...

கோவை மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 90% முடிவு; விடுபட்ட வீடுகளுக்கு ICCC உதவி எண்கள் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 முதற்கட்ட வீட்டுக் கணக்கெடுப்பு பணிகள் 90% நிறைவு. விடுபட்ட வீட...

அமராவதி அணை நீர்மட்டம் 57.52 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணை 33.79 அடியாக பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் 57.52 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 33.79...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது....

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...