உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கோவை ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லுரி மற்றும் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு

உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கோவை ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லுரி மற்றும் மருத்துவமனை சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நிழ்ச்சியில் புகையிலைனால் ஏற்படும் தீமைகள் மற்றும் உடல் உபாதைகள் பற்றி பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.


கோவை: புகையிலை பழக்கத்தினால் ஏற்படும் தீய விளைவுகளை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த, ஒவ்வொரு வருடமும் உலக புகையிலை எதிர்ப்பு தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லுரி மற்றும் மருத்துவமனை சார்பாக நடைபெற்ற நிகழ்வில் கோவை பந்தய சாலை பகுதியில் எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின்இணை நிர்வாக அறங்காவலர் சுந்தர் தலைமை தாங்கி கொடியசைத்து விழாவினை தொடங்கி வைத்தார்.



கல்லூரியின் பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அலுவலர்கள் இந்நிகழ்ச்சியில் பங்குபெற்று சைக்கிளிங் மற்றும் நடைபயணம் சென்று பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக விழிப்புணர்வு பிரச்சார சீட்டுகள் வழங்கி புகையிலைனால் ஏற்படும் தீமைகள் மற்றும் உடல் உபாதைகளை பற்றிய விளக்கங்களை வழங்கினர்.



இதனை தொடர்ந்து புகையிலை பழக்கத்தை எதிர்த்து உறுதிமொழி மற்றும் கையெழுத்து பொதுமக்களிடம் இருந்து பெறப்பெற்றது. ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவகல்லூரியின் முதல்வர் தீபானந்தன், கோவை பந்தய சாலை காவல் நிலையத்தின் ஆய்வாளர் அர்ஜுன் மற்றும் எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி ராம்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று இவ்விழாவினை தொடங்கி வைத்து சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியில் பொது மக்களுக்கு புகையிலை உபயோகிப்பதால் ஏற்படும் உடல் நல பாதிப்புகள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட்டது.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...