பீளமேடு அண்ணா நகர் இல்ல வளாகத்தில் கலைஞரின் படத்திற்கு திமுக மாவட்டச் செயலாளர் நா.கார்த்திக் மரியாதை

கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பீளமேடு அண்ணா நகர் இல்ல வளாகத்தில், கலைஞரின் திருவுருவப் படத்திற்கு கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.


கோவை: கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ex.எம்எல்ஏ., பீளமேடு அண்ணா நகர் இல்ல வளாகத்தில், முத்தமிழறிஞர், செம்மொழிக்காவலர், தலைவர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, முத்தமிழறிஞர் செம்மொழிக் காவலர் தலைவர் கலைஞரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி, மற்றும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று ஜூன்.3 நடைபெற்றது.



கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ex.எம்எல்ஏ. பங்கேற்று முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் திருவுருவப் படத்திற்கு, மலர்தூவி,புகழ் வணக்கம் செலுத்தினார். பின்னர் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.



கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், கலைஞரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில், திமுக கழக தலைமை செயற்குழு உறுப்பினர் வே.பாலசுப்பிரமணியன், திமுக கழக பொதுக்குழு உறுப்பினர் ஆர்.மணிகண்டன், பீளமேடு பகுதி-1 திமுக செயலாளர் துரை.செந்தமிழ்செல்வன், 52 வது வார்டு செயலாளர் கி.நாராயணன், கோவை மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ராஜாமணி, 52 வது வார்டு அவைத்தலைவர் பொ.கோவிந்தராஜ், சுந்தர்ராஜன், சி.டி.சி.நடராஜ், எஸ்.ரங்கதுரை, பாலச்சந்திரன், வார்டு பிரதிநிதி ஆட்டோ வாசு, கிரீன்வே சுப்பிரமணியம், மனோகரன், அருள்மிகு ஸ்ரீ‌ கோனியம்மன் திருக்கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் வி.ஆர்.வெங்கடேஷ், கோகுல், கங்கை ரவி, கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புக்கள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

மாணவர் அமுதன் மரணம், தமிழகத்தில் அதிகரிக்கும் குற்றங்களை கண்டித்து கோவையில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

கோவை மாணவர் அமுதன் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தமிழகத்தில் கொலை, கொள்ளை மற...

கோவை நவக்கரை ஏ.ஜே.கே. கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வுடன் சிறப்பான ஓணம் விழா

கோவை நவக்கரையில் உள்ள ஏ.ஜே.கே. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 14 முதல் 20 வரை ஓணம் விழா கொண்டாடப்பட்டது. போதைப்...

பேரூர் பகுதியில் 1.10 டன் புகையிலை பொருள்கள் பறிமுதல்: ஒருவர் கைது

கோவை மாவட்ட காவல்துறை பேரூர் பகுதியில் சுமார் 1.10 டன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ஒருவரை கைது செ...

மசக்காளிபாளையம் நகராட்சிப் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் முதலிடம்

கோயம்புத்தூர் மாவட்ட அளவில் நடைபெற்ற கேரம் போட்டியில் மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் ஒற்றையர் மற்று...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் பொள்ளாச்சி பிரதான சாலையில் முட்புதர் அகற்றும் பணி

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண் 98ல் பொள்ளாச்சி பிரதான சாலை எல்ஐசி காலனி பகுதியில் சாலையோர செடிகள் மற்றும் முட...

கோவை ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி – உயிர் அமைப்பு இடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை வலுப்படுத்த ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மற்றும் உயிர் அமைப்பு இடையே புரிந்துண...