பீளமேடு அண்ணா நகர் இல்ல வளாகத்தில் கலைஞரின் படத்திற்கு திமுக மாவட்டச் செயலாளர் நா.கார்த்திக் மரியாதை

கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பீளமேடு அண்ணா நகர் இல்ல வளாகத்தில், கலைஞரின் திருவுருவப் படத்திற்கு கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.


கோவை: கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ex.எம்எல்ஏ., பீளமேடு அண்ணா நகர் இல்ல வளாகத்தில், முத்தமிழறிஞர், செம்மொழிக்காவலர், தலைவர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, முத்தமிழறிஞர் செம்மொழிக் காவலர் தலைவர் கலைஞரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி, மற்றும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று ஜூன்.3 நடைபெற்றது.



கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ex.எம்எல்ஏ. பங்கேற்று முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் திருவுருவப் படத்திற்கு, மலர்தூவி,புகழ் வணக்கம் செலுத்தினார். பின்னர் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.



கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், கலைஞரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில், திமுக கழக தலைமை செயற்குழு உறுப்பினர் வே.பாலசுப்பிரமணியன், திமுக கழக பொதுக்குழு உறுப்பினர் ஆர்.மணிகண்டன், பீளமேடு பகுதி-1 திமுக செயலாளர் துரை.செந்தமிழ்செல்வன், 52 வது வார்டு செயலாளர் கி.நாராயணன், கோவை மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ராஜாமணி, 52 வது வார்டு அவைத்தலைவர் பொ.கோவிந்தராஜ், சுந்தர்ராஜன், சி.டி.சி.நடராஜ், எஸ்.ரங்கதுரை, பாலச்சந்திரன், வார்டு பிரதிநிதி ஆட்டோ வாசு, கிரீன்வே சுப்பிரமணியம், மனோகரன், அருள்மிகு ஸ்ரீ‌ கோனியம்மன் திருக்கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் வி.ஆர்.வெங்கடேஷ், கோகுல், கங்கை ரவி, கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புக்கள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...