தாராபுரம் வழியாக வேடசந்தூருக்கு பேருந்தில் கஞ்சா கடத்திய 5 பேர் கைது - 8 கிலோ கஞ்சா பறிமுதல்

தாராபுரம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததை ஒப்புக்கொண்டனர். இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.



திருப்பூர்: தாராபுரம் வழியாக திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூருக்கு பேருந்தில் கஞ்சா கடத்தி வந்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் 8-கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். போலீசார் 5- பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பேருந்து நிலையத்தில் கைப்பையுடன் சந்தேகப்படும்படியான நபர் ஒருவர் சுற்றித் திரிவதாக தாராபுரம் நெடுஞ்சாலைத்துறை ரோந்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது.



தகவலின் அடிப்படையில் தாராபுரம் பேருந்து நிலையத்திற்குச் சென்ற போலீசார் சந்தேகப்படும்படி கைப்பையுடன் சுற்றித்திரிந்த நபரை சோதனை செய்ததில் கைப்பையில் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

அந்த நபரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா நலமானார் கோட்டை பகுதியைச் சேர்ந்த சுஜித்குமார் (20) என்பது தெரியவந்தது. அவரிடம் விசாரணை நடத்தியதில் மேலும் சுஜித் குமாரின் நண்பர்கள் இதில் சம்பந்தப்பட்டுள்ளதாக தெரியவந்தது.

உடனடியாக திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதிக்குச் சென்ற போலீசார் மதுபாலன் (எ) வடிவேல் (27) கார்த்திக் (30) மோகன்தாஸ் (37) அருண்குமார் (28) என மொத்தம் 5- பேரை தாராபுரம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததை ஒப்புக்கொண்டனர். இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...