வால்பாறை அருகே காட்டு யானை தாக்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு..!

விடுமுறை தினத்தை முன்னிட்டு தனது வீட்டுக்கு வந்த கல்லூரி மாணவன் புதுகாடு எஸ்டேட் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்தார்.



Coimbatore: கோவை மாவட்டம் வால்பாறை அருகே சேக்கல்முடி எஸ்டேட் பகுதியில் புதுகாடு பகுதியில் குடியிருந்து வரும் சுரேஷ் என்பவரது மகன் முகேஷ் வயது பதினெட்டு இவர் மலுமிச்சம்பட்டி பகுதியில் எஸ்என்எம்வி கல்லூரி முதலாம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறார். இவர் விடுமுறை தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் தனது வீட்டுக்கு வந்துள்ளார்.

இதனிடையே, நேற்று மாலை வால்பாறை வந்து விட்டு வீட்டிற்குச் செல்லும் வழியில் புதுகாடு எஸ்டேட் பகுதிக்கு சென்று உள்ளார். வன பகுதியில் இருந்து வந்தஇரண்டு காட்டு யானைகள் சாலையில் நின்று உள்ளது. யானையை பார்த்து பைக் நிறுத்தி உள்ளனர். இதில் யானை இவர்களை தாக்கியது. இதில் சந்தோஷம் என்பவர் லேசான காயத்துடன் தப்பி ஓடினார். முகேஷ் என்பவரை யானை தாக்கியதில் பலத்த காயம் அடைந்து உள்ளார். இவரை பொதுமக்கள் காப்பாற்றி எஸ்டேட் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற உள்ளனர் அங்கு இவர் இறந்து விட்டதாக தெரிவித்த நிலையில்

வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டு உள்ளனர்.



கல்லூரி மாணவன் காட்டு யானை தாக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...