கோவை மருதமலை வனப்பகுதியில் உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண் யானைக்கு 2வது நாளாக சிகிச்சை

உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண் யானைக்கு குளுக்கோஸ், நோய் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் நீர்ச்சத்து உணவுகள் கொடுத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. யானையின் உடல் நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து கிரேன் மூலமாக காட்டு யானை தூக்கி நிற்க வைக்கப்பட்டது.


கோவை: கோவை மருதமலை அடிவார வனப்பகுதியில் நேற்று (30.05.2024) காலை உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பெண் காட்டு யானை குட்டியுடன் கண்டறியப்பட்டது. நேற்று முழுவதும் உடல் நலம் பாதிக்கப்பட்ட காட்டு யானைக்கு வனத்துறை மற்றும் கால்நடை மருத்துவ குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்த நிலையில் இரண்டாவது நாளாக இன்று (31.05.2024) காலை முதல் குளுக்கோஸ், நோய் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் நீர்ச்சத்து உணவுகள் கொடுத்து சிகிச்சை அளித்து வந்தனர்.



யானையின் உடல் நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து கிரேன் மூலமாக காட்டு யானை தூக்கி நிக்க வைக்கப்பட்டது.

மேலும் அதிக அளவு தண்ணீர் யானை மீது பீச்சி அடிக்கப்பட்ட நிலையில், சோர்வாக காணப்பட்ட யானை மீண்டும் உடல் நலம் தேறி வருகிறது.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...