கோவை குற்றாலம் அருகே சாடிவயல் பகுதியில் ஊருக்குள் புகுந்த காட்டு யானை - பொதுமக்கள் அச்சம்

சாடிவயல் பகுதியில் இன்று அதிகாலையில் ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை தொடர்ந்து அங்கேயே முகாமிட்டுள்ளது. இந்த யானையை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இந்த காட்டு யானைகள் அவ்வப்போது உணவு மற்றும் குடிநீர் தேடி வனப்பகுதியை விட்டு ஊருக்குள் வருவது வாடிக்கையாக உள்ளது.

இந்த நிலையில் கோவை குற்றாலம் அருகே அமைந்துள்ள சாடிவயல் பகுதியில் இன்று (31.05.2024) அதிகாலையில்ஒரு காட்டு யானை ஊருக்குள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். இது குறித்த தகவல் அறிந்த வனத்துறையினர் அந்த காட்டு யானையை அங்கிருந்து விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது யானை சாடிவயல் பகுதியில் தொடர்ந்து முகாமிட்டு உள்ளதால் பொதுமக்கள் தனியாக காலை மற்றும் மாலை நேரங்களில் வெளியே நடமாட வேண்டாம் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.மேலும் வனத்துறையினருடன், பொதுமக்களும் இணைந்து காட்டு யானையை வனப் பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...

கோவை மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 90% முடிவு; விடுபட்ட வீடுகளுக்கு ICCC உதவி எண்கள் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 முதற்கட்ட வீட்டுக் கணக்கெடுப்பு பணிகள் 90% நிறைவு. விடுபட்ட வீட...

அமராவதி அணை நீர்மட்டம் 57.52 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணை 33.79 அடியாக பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் 57.52 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 33.79...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது....

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...