கோவை குற்றாலம் அருகே சாடிவயல் பகுதியில் ஊருக்குள் புகுந்த காட்டு யானை - பொதுமக்கள் அச்சம்

சாடிவயல் பகுதியில் இன்று அதிகாலையில் ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை தொடர்ந்து அங்கேயே முகாமிட்டுள்ளது. இந்த யானையை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இந்த காட்டு யானைகள் அவ்வப்போது உணவு மற்றும் குடிநீர் தேடி வனப்பகுதியை விட்டு ஊருக்குள் வருவது வாடிக்கையாக உள்ளது.

இந்த நிலையில் கோவை குற்றாலம் அருகே அமைந்துள்ள சாடிவயல் பகுதியில் இன்று (31.05.2024) அதிகாலையில்ஒரு காட்டு யானை ஊருக்குள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். இது குறித்த தகவல் அறிந்த வனத்துறையினர் அந்த காட்டு யானையை அங்கிருந்து விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது யானை சாடிவயல் பகுதியில் தொடர்ந்து முகாமிட்டு உள்ளதால் பொதுமக்கள் தனியாக காலை மற்றும் மாலை நேரங்களில் வெளியே நடமாட வேண்டாம் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.மேலும் வனத்துறையினருடன், பொதுமக்களும் இணைந்து காட்டு யானையை வனப் பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...