கோவை தனிஷ்க் நகை கடையில் 100 சதவீதம் தங்க பரிமாற்றம் - புதிய திட்டம் அறிமுகம்

கோல்டு எக்சேஞ்ச் பாலிசி திட்டத்தின் மூலம் வாடிக்ககையாளர்கள் தங்களுடைய பழைய நகைகளுக்கு கழிவே இல்லாமல் அதற்கு பதிலாக புதிய வடிவமைப்புகளை கொண்டு புதிய தங்க ஆபரணங்களாக தரம் உயர்த்தி கொள்ளலாம். இந்த திட்டம் வரும் ஜூன் 15ம் தேதி வரை செயல்பாட்டில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மேட்டுப்பாளையம் வெள்ளக்கிணறு பகுதியில் இயங்கிவரும் தனிஷ்க் நகை கடையில், அந்நிறுவன மண்டல வணிக மேலாளர் சந்திரசேகர், வட்டார வணிக மேலாளர் வினீத், அசோகன் முத்துசாமி

பிரான்சைஸ் நிர்வாக இயக்குனர் ஆகியோர் 100 சதவீதம் தங்க பரிமாற்றம் புதிய திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தனர்.



புதிய திட்டம் குறித்து அவர்கள் கூறுகையில், தனிஷ்க் நகை கடையில் தற்போது வாடிக்கையாளர்களுக்கான 100 சதவீதம் தங்க பரிமாற்றம் என்ற ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளோம். அதன்படி வாடிக்கையாளர்களின் பழைய தங்கத்திற்கு அதிகப்பட்ச மதிப்பை வழங்கிட திட்டமிட்டு கடந்த ஒருவார காலமாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.



கோல்டு எக்சேஞ்ச் பாலிசி என்ற திட்டத்தின் மூலம் வாடிக்ககையாளர்கள் தங்களுடைய பழைய நகைகளுக்கு கழிவே இல்லாமல் அதற்கு பதிலாக புதிய வடிவமைப்புகளை கொண்டு புதிய தங்க ஆபரணங்களாக தரம் உயர்த்தி கொள்ள இந்த ஒரு அரிய வாய்ப்பை பயன்படுத்திகொள்ளலாம். இந்த திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் தங்கத்திற்கான அதிகபட்ச மதிப்பை பெறுவதை உறுதிப்படுத்துகிறது.



இந்தியாவில் உள்ள எந்த நகைக்கடையிலிருந்தும் வாங்கிய 20 கேரட் மற்றும் அதற்கு மேற்பட்ட பழைய தங்க நகைகளாக இருந்தாலும் அவற்றை தனிஷ்க்கில் அளித்து புதிய ஆபரணங்களாக மாற்றிக் கொள்ளலாம். இந்த தங்கபரிமாற்றம் திட்டத்தின்கீழ் தனிஷ்க்கின் சிறப்பான தங்க நகைகளான க்ளாஸ் குந்தன், குந்தன் போல்கி, ஓபன் போல்கி, பிஜேடபிள்யூஎஸ், வண்ணகற்கள் மற்றும் இன்னும் பல பிரிவுகளிலான நகைகளையும் தனிஷ்க் தங்க பரிமாற்றம் திட்டம் மூலம் வாங்க முடியும் என்று தெரிவித்துள்ளனர். இந்த திட்டம் வரும் ஜூன் 15ம் தேதி வரை செயல்பாட்டில் இருக்கும் என்று கூறினர்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...