துடியலூர் அருகே கேரளா லாட்டரி சீட்டு விற்பனை செய்த கும்பலை சேர்ந்த 3 பேர் கைது

கேரள மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த மூன்று பேரை கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் இருந்து மொத்தம் 96 கேரள மாநில லாட்டரி டிக்கெட், ஒரு கார், 9 செல்போன் ரூ.1 லட்சத்து 61 ஆயிரம் பணம், 5 லேப்டாப் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவை துடியலூர் பகுதிகளில் தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி டிக்கெட் விற்பனை செய்யப்படுவதாக துடியலூர் காவல்துறையினருக்கு தகவல் வந்தது.

அதன்பேரில் போலீசார் நேற்று மே.29 துடியலூர்–சரவணம்பட்டி ரோட்டில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட் விற்பனை செய்ததாக எஸ்.எம்.பாளையம், இ.பி. காலனியை சேர்ந்த வினோத்குமார் (வயது 39), வெள்ளக்கிணறு சதீஷ்குமார் (வயது 39), எஸ்.எம்.பாளையம் பிரதீப் (வயது 34), நல்லாம்பாளையம் ஆதிஷ் கண்ணன் (வயது28) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் பிரபு என்பவர் தப்பி ஓடிவிட்டார். இவர்களிடமிருந்து மொத்தம் 96 கேரள மாநில லாட்டரி டிக்கெட், ஒரு கார், 9 செல்போன் ரூ.1 லட்சத்து 61 ஆயிரம் பணம், 5 லேப்டாப் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...