கோவை வந்த ரயில்களில் 2 பேர் உயிரிழப்பு - ரயில் நிலையத்தில் மருத்துவ வசதி ஏற்படுத்த பயணிகள் கோரிக்கை

தஞ்சாவூரிலிருந்து கோவைக்கு வந்த செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த சேந்தமங்கலத்தை சேர்ந்த காஜா என்பவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதேபோல், ஐலண்ட்எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த பெண் பயணி ஒருவரும் உயிரிந்தார்.


கோவை: கோவை ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு இன்று மே.30 காலை தஞ்சாவூரிலிருந்து செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. அதில் எஸ் 11வது பெட்டியில் பயணம் செய்த திருவாரூர் அருகே உள்ள மன்னார்குடி, சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த காஜா (வயது 52) என்ற பயணிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இந்த நிலையில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு ரெயில் கோவை அருகில் வந்த போது அவர் பரிதாபமாக இறந்தார். பின்னர் இது குறித்து அவரது மனைவி பூங்குழலி கொடுத்த புகாரின் பேரில் கோவை ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அதேபோன்று நேற்று மே.29 இரவு பாலக்காட்டில் இருந்து பெங்களூர் சென்ற ஐலண்ட்எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியில் பயணம் செய்த மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த பெண் பயணியும் கோவை அருகில் ரயில் வந்த போது திடீரென இறந்தார்.

அடுத்தடுத்து ரயிலில் வந்த பயணிகள் இறந்ததால் கோவை ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு கோவை வடவள்ளியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்ற பயணி கோவை ரயிலில் ஏறும்போது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். எனவே, ரயில் நிலையங்களில் டாக்டர்கள் குழு உடன் மருத்துவ வசதி ஏற்படுத்த வேண்டும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 49 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள்...

இதர பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு மத்திய அரசு கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் மாணவர்களுக்கு மத்திய அரசின் PM...

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (02.09.2026) மின்தடை

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 2ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் K ரங்கநாயகி ராமச்சந்தி...

காய்ச்சல் பாதிப்பை தடுக்க கோவை மாநகராட்சி புதிய நடவடிக்கை: 24 மணி நேர மையம் தொடக்கம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 24 மணி நேர காய்ச்சல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் துவக்கப்பட்டுள்ளது. காய்ச்ச...