உடுமலை அருகே பண்ணைக்கிணறு பகுதியில் மழை நீர் குட்டையில் மூழ்கி இரண்டு பள்ளி சிறுவர்கள் உயிரிழப்பு

பண்ணைக்கிணறு பகுதியில விளையாடச் சென்ற இரண்டு பள்ளிச் சிறுவர்கள் மழைநீர் குட்டையில் மூழ்கி உயிரிழந்தனர். சிறுவர்களின் உடல்களை மீட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள குடிமங்கலம் ஒன்றியம் பண்ணைக்கிணறு ஊராட்சியில் நேற்று முன்தினம் விளையாடச் சென்ற ஐந்து சிறுவர்களில் மூன்று சிறுவர்கள் வீடு திரும்பினர்.

மிதுன் ராஜ்(11) (5-ம் வகுப்பு மாணவன்) மற்றும் வினோத்(12) (6-ம் வகுப்பு மாணவன்) மட்டும் வீடு திரும்பாத நிலையில் பதற்றம் அடைந்து பெற்றோர் குடிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.



காவல்துறையினர் பல்வேறு பகுதிகளில் இரண்டு சிறுவர்களின் புகைபடங்கள் அனுப்பி தேடி வந்தனர். இந்த நிலையில் இன்று காலையில் பண்ணை கிணறு அருகில் உள்ள மழை நீர் குட்டையில் இரண்டு சிறுவர்கள் உடல் மிதப்பதாக குடிமங்கலம் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.



சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புதுறையினர் மழை நீர் குட்டையில் உயிரிழந்த சிறுவர்களின் உடல்களை மீட்டனர். பின்னர் காணாமல் போன சிறுவர்கள் என உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து குடிமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

உடுமலை அருகே விளையாடச் சென்ற பள்ளி மாணவர்கள் மழை நீர் குட்டையில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் இந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...