உடுமலை அருகே பண்ணைக்கிணறு பகுதியில் மழை நீர் குட்டையில் மூழ்கி இரண்டு பள்ளி சிறுவர்கள் உயிரிழப்பு

பண்ணைக்கிணறு பகுதியில விளையாடச் சென்ற இரண்டு பள்ளிச் சிறுவர்கள் மழைநீர் குட்டையில் மூழ்கி உயிரிழந்தனர். சிறுவர்களின் உடல்களை மீட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள குடிமங்கலம் ஒன்றியம் பண்ணைக்கிணறு ஊராட்சியில் நேற்று முன்தினம் விளையாடச் சென்ற ஐந்து சிறுவர்களில் மூன்று சிறுவர்கள் வீடு திரும்பினர்.

மிதுன் ராஜ்(11) (5-ம் வகுப்பு மாணவன்) மற்றும் வினோத்(12) (6-ம் வகுப்பு மாணவன்) மட்டும் வீடு திரும்பாத நிலையில் பதற்றம் அடைந்து பெற்றோர் குடிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.



காவல்துறையினர் பல்வேறு பகுதிகளில் இரண்டு சிறுவர்களின் புகைபடங்கள் அனுப்பி தேடி வந்தனர். இந்த நிலையில் இன்று காலையில் பண்ணை கிணறு அருகில் உள்ள மழை நீர் குட்டையில் இரண்டு சிறுவர்கள் உடல் மிதப்பதாக குடிமங்கலம் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.



சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புதுறையினர் மழை நீர் குட்டையில் உயிரிழந்த சிறுவர்களின் உடல்களை மீட்டனர். பின்னர் காணாமல் போன சிறுவர்கள் என உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து குடிமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

உடுமலை அருகே விளையாடச் சென்ற பள்ளி மாணவர்கள் மழை நீர் குட்டையில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் இந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...