தாராபுரத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை - போக்சோவில் இரண்டு சிறுவர்கள் கைது

தாராபுரத்தில் நட்பாக பழகி பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இரண்டு சிறுவர்களை காவல்துறையினர் போக்சோவில் கைது செய்து சிறார் மையத்தில் சேர்த்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 14,வயது சிறுமிக்கு, 3 மாதமாக பல விதங்களால் பாலியல் தொல்லை கொடுத்த, இரண்டு சிறுவர்கள் போக்சோவில் கைது செய்யப்பட்டனர்.

தாராபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சிறுவனும், காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த சிறுவனும், சிறுமியுடன் நட்பாக பழகி வந்துள்ளனர்.

இந்த நிலையில் இரண்டு சிறுவர்களும் சேர்ந்து 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். இதுகுறித்து சிறுமி தன் தாயாரிடம் கூறவே தாயார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அங்கு மருத்துவ பரிசோதனை செய்துள்ளார். அப்போது அரசு மருத்துவர்கள் தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் தகவலின் பெயரில் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் செல்லம் நேரில் வந்து சிறுமியிடம் விசாரணை நடத்தினார்.

அப்போது இரண்டு சிறுவர்களும் தனக்கு பாலியல் ரீதியில் தொந்தரவு கொடுத்ததாக சிறுமி தெரிவித்தார். இதனை அடுத்து சிறுவர்கள் இருவரையும் கைது செய்த ஆய்வாளர் செல்லம், இருவரும் சிறுவர்களாக இருப்பதால் அவர்கள் இருவரையும் திருப்பூரில் உள்ள சிறார் மையத்திலும் சேர்த்தனர்.

சிறுமியை மருத்துவமனையில் சேர்த்து, சிகிச்சை அளிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக அரசின் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர்.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...