கோவை தனியார் மருத்துவமனை வளாகத்தில் திருட்டில் ஈடுபட்டதாக கூறி ஒருவர் அடித்து கொலை: 8 பேர் கைது

மருத்துவமனை நிர்வாகத்தை சேர்ந்த ஒருவர் உட்பட காவலாளிகள், ஊழியர்கள் என எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் மேலும் 11 பேர் மீது கொலை உட்பட ஐந்து பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவையில் உள்ள KMCH என்ற தனியார் மருத்துவமனையில் இரும்பு பொருட்களை திருட முயன்றதாக கூறி ஒருவர் மருத்துவமனை ஊழியர்களால் தாக்கப்பட்டு, உயிரிழந்த சம்பவம், தொடர்பான வழக்கில், முதல் கட்ட விசாரணைக்கு பின்னர், மருத்துவமனை நிர்வாகத்தினர் மற்றும் ஊழியர்கள் என எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 11 பேர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பாய்ந்துள்ளது.

நேற்று முன்தினம், கோவை அவிநாசி சாலையில் உள்ள KMCH என்ற தனியார் மருத்துவமனை வளாகத்தில், இரும்பு பொருட்களை திருடன் முயன்றதாக கூறி, காந்திமாநகர் பகுதியை சேர்ந்த ராஜா என்ற நபரை மருத்துவமனை நிர்வாகத்தினர் மற்றும் காவலாளிகள் தாக்கியதில், பலத்த காயமடைந்த அவர், அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், சிகிச்சைக்காக சென்ற தனது கணவரை தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினர் மற்றும் ஊழியர்கள் அடித்து கொலை செய்து விட்டதாக பாதிக்கப்பட்ட ராஜா என்பவரின் மனைவி சுகன்யா பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில், சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணையை துவங்கினர். மாநகர காவல் துணை ஆணையர் ஸ்டாலின் தலைமையில் காவல்துறை அதிகாரிகள் மருத்துவமனை நிர்வாகத்தினர் மற்றும் ஊழியர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.



இந்த நிலையில், மருத்துவமனை துணைத் தலைவர் நாராயணன், தகவல் பிரிவு மேலாளர் ரமேஷ், செயலாக்கத்துறை அதிகாரி சரவணகுமார், பிஆர்ஓ சசிக்குமார், பிளம்பர் சுரேஷ் , சரவணகுமார், காவலாளி மணிகண்டன், ஸ்டோர் மேனேஜர் சதீஷ்குமார் என 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் 11 பேர் மீது கொலை உட்பட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, FIR - யில் முன்னுக்கு பின் முரணாக தகவல்கள் உள்ளதாக கூறி உடலை வாங்க மறுத்து கோவை அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை அறை முன்பு ராஜாவின் குடும்பத்தார் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர், காவல்துறையினரின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு உடலை வாங்குவதற்கு சம்பந்தம் தெரிவித்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த வழக்கில் மருத்துவமனை நிர்வாகத்தினர் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...