கோவையில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரிந்த வீடில்லா நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் விளக்கம்

நாய்களுக்கு கழுத்து பட்டை, கழுத்து கச்சை மற்றும் வாய்பகுதியில் அணியக் கூடிய முகமூடி இல்லாமல் அழைத்து வரக் கூடாது. பொது வெளியில் கட்டி போடுதல் அல்லது தன்னிச்சையாக வெளியில் விடுவது போன்ற செயல்பாடுகளை தவிர்க்கும்படி வளர்ப்பு நாய் வைத்திருப்பவர்களுக்கு கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவுறுத்தியுள்ளார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளுக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக சுற்றித்திரியும் வீடில்லா நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக 2023 ஏப்ரல் முதல் நாளது வரை வடக்கு மண்டலத்தில் 1572 நாய்கள், தெற்கு மண்டலத்தில் 1211 நாய்கள், கிழக்கு மண்டலத்தில் 1281 நாய்கள், மேற்கு மண்டலத்தில் 1544 நாய்கள் மற்றும் மத்திய மண்டலத்தில் 4026 நாய்கள் என 9634 வீடில்லா நாய்கள் பிடிக்கப்பட்டு கருத்தடையும் மற்றும் வெறிநோய் தடுப்பூசியும் செலுத்தப்பட்டு பிடிக்கப்பட்ட இடத்திலிலேயே விடப்பட்டுள்ளன.

மேலும், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலுள்ள வீடுகளில் வளர்க்கும் வளர்ப்பு நாய்களினால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் வகையில் உரிய பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி இனிவரும் காலங்களில் பொது வெளியில் அழைத்து வரும் வளர்ப்பு நாய்களுக்கு கட்டாயம் கழுத்து பட்டை (Dog Neck Collar), கழுத்து கச்சை (Belt) மற்றும் வாய்பகுதியில் அணியக் கூடிய முகமூடி (Dog muzzle) அணிவிக்கப்பட வேண்டுமென மாநகராட்சி சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.

ஏற்கனவே மாநகராட்சி பகுதிகளில் சாலை போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரிந்த மாடுகள் பிடிக்கப்பட்டு சம்மந்தப்பட்ட மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கிழக்கு மண்டலத்தில் 10 மாடுகளுக்கு ரூ.79,000/-ம், மேற்கு மண்டலத்தில் 31 மாடுகளுக்கு ரூ.1,68,500/-ம், வடக்கு மண்டலத்தில் 1 மாட்டிற்கு ரூ.5000/-ம், தெற்கு மண்டலத்தில் 45 மாடுகளுக்கு ரூ.3,99,500/-ம் மற்றும் மத்திய மண்டலத்தில் 53 மாடுகளுக்கு ரூ.4,43,000/ம் என மொத்தம் 140 மாடுகளுக்கு ரூ.10,95,000/-ம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனுடன் தலா ஒரு குதிரை மற்றும் ஆடு பிடிக்கப்பட்டு முறையே ரூ.5000/-ம் மற்றும் ரூ.1000/-ம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

நாய்களுக்கு கழுத்து பட்டை (Dog Neck Collar), கழுத்து கச்சை (Belt) மற்றும் வாய்பகுதியில் அணியக் கூடிய முகமூடி (Dog muzzle) இல்லாமல் அழைத்து வரக் கூடாது எனவும், பொது வெளியில் கட்டி போடுதல் அல்லது தன்னிச்சையாக வெளியில் விடுவது போன்ற செயல்பாடுகளை முற்றிலும் தவிர்க்கும்படியும் வளர்ப்பு நாய்கள் வைத்திருப்பவர்களுக்கு இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது. சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகள் மற்றும் வீட்டில் வளர்க்கப்படும் கால்நடைகளால் ஏற்படும் இடையூறுகள் குறித்து புகார் அளிக்க 0422-2390262, 0422 2302323, 9443799242 ஆகிய தொலைபேசி எண்களிலும், 8190000200 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுருபிரபாகரன் தெரிவித்துள்ளார்.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...