பிள்ளையார்புரத்தில் 5000 மரக்கன்றுகள் நட கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு பொதுமக்களுக்கு அழைப்பு

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, வரும் ஜூன் 1ஆம் தேதி, பிள்ளையார்புரத்தில் 5,000 மரக்கன்றுகள் நடவுள்ளோம். இதில் விருப்பம் உள்ள பொதுமக்கள் பங்கேற்கலாம் என்று கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.


கோவை: கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் அண்மையில் வெளியிட்டுள்ள காணொளியில், மழைக்காலம் துவங்கியிருக்கிறது. இது, மரக்கன்றுகளை நடுவதற்கு நல்ல வாய்ப்பு. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, மதுக்கரை வனச்சரகத்துக்கு உட்பட்ட பிள்ளையார்புரம் பகுதியில் 27 ஏக்கர் நிலத்தில் மரக்கன்றுகள் நட முடிவு செய்துள்ளோம். வனத்துறை அனுமதி பெற்று, நிலத்தை பண்படுத்தி வைத்துள்ளோம்.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, வரும் ஜூன் 1ஆம் தேதி, பிள்ளையார்புரத்தில் 5,000 மரக்கன்றுகள் நடவுள்ளோம். பொதுமக்கள் பங்கேற்கலாம்.

வாய்ப்பு இருப்போர், மண்வெட்டி உள்ளிட்ட உபகரணங்களைக் கொண்டு வரலாம். இல்லாவிட்டாலும் இங்கேயே ஏற்பாடு செய்யப்படும். பசுமை காக்கும் முயற்சியில் கரம் கோர்க்க விரும்புவோர் இணையலாம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...