பிள்ளையார்புரத்தில் 5000 மரக்கன்றுகள் நட கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு பொதுமக்களுக்கு அழைப்பு

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, வரும் ஜூன் 1ஆம் தேதி, பிள்ளையார்புரத்தில் 5,000 மரக்கன்றுகள் நடவுள்ளோம். இதில் விருப்பம் உள்ள பொதுமக்கள் பங்கேற்கலாம் என்று கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.


கோவை: கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் அண்மையில் வெளியிட்டுள்ள காணொளியில், மழைக்காலம் துவங்கியிருக்கிறது. இது, மரக்கன்றுகளை நடுவதற்கு நல்ல வாய்ப்பு. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, மதுக்கரை வனச்சரகத்துக்கு உட்பட்ட பிள்ளையார்புரம் பகுதியில் 27 ஏக்கர் நிலத்தில் மரக்கன்றுகள் நட முடிவு செய்துள்ளோம். வனத்துறை அனுமதி பெற்று, நிலத்தை பண்படுத்தி வைத்துள்ளோம்.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, வரும் ஜூன் 1ஆம் தேதி, பிள்ளையார்புரத்தில் 5,000 மரக்கன்றுகள் நடவுள்ளோம். பொதுமக்கள் பங்கேற்கலாம்.

வாய்ப்பு இருப்போர், மண்வெட்டி உள்ளிட்ட உபகரணங்களைக் கொண்டு வரலாம். இல்லாவிட்டாலும் இங்கேயே ஏற்பாடு செய்யப்படும். பசுமை காக்கும் முயற்சியில் கரம் கோர்க்க விரும்புவோர் இணையலாம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...